அக்காவின் கள்ளக்காதலால் அவமானம்.. அக்கம் பக்கத்தினர் கேலி செய்ததால் தங்கை தற்கொலை
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே தனது அக்காள், கள்ளக்காதலனுடன் ஓடி விட்டதால் அவமானமடைந்ததாலும், அக்கம் பக்கத்தினர் கேலி பேசியதாலும் தங்கை கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
பொள்ளாச்சி தேவனூர் புதூர் பட்டத்தரசி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு 8 வயதில் மகன் உள்ளார்.
சிவகாமியின் அக்காள் கனிமொழியும் அந்த பகுதியில் வசித்து வருகிறார். அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கனிமொழிக்கும் ஒரு வாலிபருக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தனது கணழர், குழந்தைகளை விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் ஓடி விட்டார் கனிமொழி.
இதனால் அக்கம் பக்கத்தினர் சிவகாமியிடம் கேலி பேசினர், துக்கம் விசாரிப்பது போல பேசினர். மேலும் கனிமொழியின் கணவரும், சிவகாமியிடம் சத்தம் போட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த சிவகாமி கனிமொழி இருக்கும் இடத்திற்குப் போய் உன்னால் எனக்கு அவமானமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். அதைக் கேட்ட கனிமொழியோ, நான் எப்படி இருந்தால் உனக்கென்ன. நான் என் இஷ்டப்படிதான் நடந்து கொள்வேன் என்று கூறி விட்டார்.
இதனால் மேலும் அவமானமடைந்த சிவகாமி, நேராக ஊருக்கு அருகே உள்ள கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.