3வது அலையா.. வெறும் 5 நாட்களில் 242 குழந்தைகளுக்கு தொற்று.. அதிர்ச்சியில் பெங்களூரு
பெங்களூருவில் குழந்தைகளை தொற்று அதிகமாக பாதித்து வருகிறது
பெங்களூரு: பெங்களூரு நகரில் கடந்த 5 நாட்களில் மட்டும் 242க்கும் அதிகமான குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது... இது கர்நாடகாவில் பெரும் கலக்கத்தை தந்து வருகிறது.
இந்தியாவில் முதலாவது அலை கொரோனா பரவலைவிட, 2வது அலை பரவல் அதிகமானது.. இதனால் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகம்.
இந்த 2வது அலை பரவல் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை தாக்கும் வீரியம் கொண்டதாக உள்ளது.. எனவேதான் தடுப்பூசி விஷயத்தில் அந்தந்த மாநில அரசுகள் கறார் தன்மையையும், தீவிரத்தையும் காட்டியது..

பெங்களூரு
இந்நிலையில், தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை மீண்டும் பெங்களூருவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது... இதற்கு நடுவில் 3வது அலை பரவல் வரப்போவதாக தகவல்கள் வருவதால் அம்மாநில மக்கள் கலங்கி உள்ளனர். இந்த 3வது அலை குழந்தைகளையும் தாக்கும் என்று டாக்டர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர்..

குழந்தைகள்
எனவேதான், குழந்தைகளுக்கான ஸ்பெஷல் கொரோனா வார்டுகளும் அமைக்கப்பட்டு வருகின்றன... பெங்களூரு நகரில் கடந்த 5 நாட்களில் 19 வயதுக்கு உட்பட 242 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.. அதேபோல, 3வது அலை தொடங்கிவிட்டதாகவும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்...

எச்சரிக்கை
அதுமட்டுமல்ல, இந்த கடந்த 5 நாட்களில் தொற்று உறுதியானவர்களில் 106 குழந்தைகள் 9 வயதுக்கும் குறைவானவர்கள், 136 குழந்தைகள் 9 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள்தானாம்.. குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுவது வருங்காலங்களில் அதிகரிக்க கூடும் என சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது...
Recommended Video

வைரஸ்
அடுத்த சில நாட்களில் இந்த எண்ணிக்கை 3 மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளதாம்.. இப்போதைக்கு குழந்தைகளை இந்த வைரசிடம் இருந்து பாதுகாப்பதுதான் முக்கிய கடமையாக பெங்களூருவில் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது...ஆகஸ்ட் 16ம் தேதி முதல் பாதிநேர ஊரடங்கை விதிக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications