மாண்டியா பேருந்து விபத்தை பார்வையிட்ட அம்பரீஷ்.. "இறுதி மூச்சு வரை மக்களுக்காக போராடினாரே"
Recommended Video

பெங்களூர்: பெங்களூரில் மாரடைப்பால் காலமான அம்பரீஷ் நேற்று மாலை வரை மாண்டியா பேருந்து விபத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு உரிய நிதியுதவி வழங்குமாறு கோரினார்.
கன்னட நடிகரும் போராளியுமான அம்பரீஷுக்கு நேற்று இரவு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.
அவரது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் வரை மாண்டியா மாவட்டத்தில் நடந்த கோர விபத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
[கர்நாடகாவில் பேருந்து விபத்து... 9 குழந்தைகள் உட்பட 30 பேர் பலியான பரிதாபம்! ]

30 பேர் பலி
கர்நாடக மாநிலம் பாண்டவ்பூர் என்ற இடத்திலிருந்து மாண்டியாவுக்கு ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது கனகனமாரள்ளி என்ற இடத்தில் பேருந்து வந்தபோது திடீரென தாறுமாறாக ஓடி அருகில் இருந்த கால்வாயில் விழுந்தது. இந்த கோர விபத்தில் 30 பேர் பலியாகிவிட்டனர்.

முடுக்கிவிட்ட அம்பரீஷ்
இந்த தகவலை அறிந்த அம்பரீஷ் நேராக சம்பவ இடத்துக்கு வந்து விபத்தை பார்வையிட்டார். அந்த பேருந்தை மீட்பதற்கு தேவையான பணிகளை முடுக்கி விட்டார்.

தொண்டர்களை நிலைகுலைய வைத்தது
பல்வேறு டிவி சேனல்களுக்கு விபத்து குறித்து பேட்டியும் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குமாறு அரசை கேட்டுக் கொண்டார். களத்தில் இருந்து கொண்டு இத்தகைய பணிகளை அவர் ஆற்றிய நிலையில் இரவு உயிரிழந்தார் என்ற செய்தி அவரது ரசிகர்களையும் தொண்டர்களையும் நிலைக்குலைய செய்துவிட்டது.

வேதனை
மருத்துவமனை வாயிலில் நின்று அழும் தொண்டர்கள், கடைசி நேரத்தில் கூட குடும்பத்தினருடன் செலவிடாமல் மக்கள் நல பணிகளிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டாரே என வேதனை தெரிவித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications