"தப்பு பண்ணிட்டாங்க.." பெங்களூரில் பெற்ற தாயை நடுரோட்டில் வெட்டிக்கொன்ற மகள்.. பரபர வாக்குமூலம்!
பெங்களூர்: பெங்களூரை சேர்ந்த அர்ச்சனா ரெட்டி என்ற பெண் கடந்த சில நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில் இந்த கொலைக்கு பின் இருந்த காரணம் தெரிய வந்துள்ளது.
அர்ச்சனா ரெட்டி கொலை தொடர்பாக போலீசார் கடந்த சில நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். பெங்களூரில் பெலந்தூர் பகுதியை சேர்ந்தவர் அர்ச்சனா ரெட்டி.
இவர் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு பிஸ்னஸ்களை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இவருக்கும் இவரின் முதல் கணவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் விவாகரத்து ஆகிவிட்டது.

ஜிம் பயிற்சி
இதையடுத்து அர்ச்சனா ரெட்டி கடந்த சில மாதங்களாக நவீன் என்ற ஜிம் பயிற்சியாளருடன் வாழ்ந்து வந்தார். அர்ச்சனா ரெட்டி - நவீனுடன் அர்ச்சனா ரெட்டியின் முதல் கணவருக்கு பிறந்த மகனும் மகள் யுவிகாவும் (21) ஒன்றாக வசித்து வந்தனர். இவர்கள் குடும்பத்தில் பெரிதாக பிரச்சனை எல்லாம் இல்லை.

பெங்களூர் கொலை
இந்த நிலையில்தான் கடந்த 27ம் தேதி இரவு ஹொஸா சாலை பகுதியில் அர்ச்சனா ரெட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். போலீசார் இதையடுத்து வழக்கு பதிவு செய்தனர். இதில் சிசிடிவி காட்சி அடிப்படையில் அர்ச்சனா ரெட்டியை அவரின் மகள் யுவிகா கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

அர்ச்சனா ரெட்டி கொலை
இதையடுத்து போலீசார் யுவிகாவிடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி பின்னணி அம்பலம் ஆனது. அதன்படி அர்ச்சனா ரெட்டியின் இரண்டாவது கணவர் நவீனுடன் யுவிகா தகாத உறவில் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததை அறிந்துகொண்டு அர்ச்சனா ரெட்டி அவர்களை கண்டித்து இருக்கிறார். அவர் உனக்கு அப்பா மாதிரி.. இப்படி செய்யாதே என்று கண்டித்துள்ளார்.

பணம் தரவில்லை
இதனால் யுவிகா மீது கோபமாக இருந்த அர்ச்சனா ரெட்டி அவருக்கு பணம் கொடுப்பதை நிறுத்தி உள்ளார். ஆனால் யுவிகாவோ தனக்கு சொத்தில் பாதி வேண்டும் என்று கூறி அர்ச்சனா ரெட்டியுடன் அடிக்கடி சண்டை போட்டுள்ளார். இந்த சண்டை முற்றவே யுவிகா நவீனுடன் சேர்ந்து அர்ச்சனா ரெட்டியை கொலை செய்துள்ளார்.

கொலை
அர்ச்சனா ரெட்டியின் இரண்டாவது கணவர் நவீன், மகள் யுவிகா இருவரும் இதனால் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டனர். நான் சொத்தை கேட்டப்ப கொடுக்கல.. என்னையும் நவீனையும் பிரிக்க பார்த்தாங்க. அதனால்தான் இப்படி செய்தேன் என்று யுவிகா போலீஸ் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். கொலைக்கு உடந்தையாக இருந்த சந்தோஷ் குமார், அனுபம் சின்கா, நரேந்திரா, ஆனந்த் ஆகியோர் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டனர்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications