பெங்களூரில் "கொள்ளை"! ஒரே ரூட்டுக்கு மெட்ரோவுக்கும் ஆட்டோவுக்கும் இத்தனை கட்டண வேறுபாடா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் ஒரே ரூட்டுக்கான மெட்ரோ கட்டணம் ஆட்டோ கட்டணம் குறித்து குடியிருப்புவாசி ஒருவர் ஒப்பிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. இது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர், சென்னை உள்ளிட்ட மெட்ரோபாலிட்டன் சிட்டிகளில் எல்லாம் cost of living அதிகம் ஆகும். அதனால்தான் இங்கெல்லாம் சாமானிய மக்கள் வசிக்க தயங்குகிறார்கள்.

bangalore transport

இங்கெல்லாம் வாடகை கொடுத்து மாளாது. இந்த வாடகைக்கு ஒரு சொந்த வீடே வாங்கிவிடலாம். அது போல் காய்கறி, பழங்கள், மளிகை சாமான்கள் எல்லாமே விலை அதிகம்தான். இதனால்தான் இந்த நகரங்களில் தங்கியிருந்து வேலை பார்ப்போர், மளிகை சாமான்களை சொந்த ஊர்களில் இருந்து வாங்கி ரயிலிலோ பஸ்ஸிலோ போட்டு கொண்டு வந்து விடுகிறார்கள்.

இது போல் போக்குவரத்து கட்டணமும் உயர்வுதான். பேருந்து கட்டணமும் ஆட்டோ கட்டணமும் அதிகமாகும். மக்கள் நெருக்கடி, தொழிற்சாலைகளின் வரவு, வேலைவாய்ப்புகளின் அடிப்படையில் செலவினங்கள் கூட குறைய ஆகும்.

அந்த வகையில் பெங்களூரை சேர்ந்த ஒருவர் ஆட்டோ கட்டணத்தையும் மெட்ரோ கட்டணத்தையும் ஒப்பிட்டு பதிவிட்டுள்ளார். அதாவது அவர் மல்லேஸ்வரத்திலிருந்து யெலசெனஹள்ளி வரை மெட்ரோவில் 3 பேருடன் சென்றாராம். அதற்கு கட்டணம் 180 ரூபாயாம்.

அதே ரூட்டில் மூவருடன் ஆட்டோவில் சென்ற போது ரூ 210 வசூலிக்கப்பட்டதாக சொல்கிறார். மெட்ரோவில் ஏசி வசதி, குறைந்தபட்சம் 20 முதல் 25 நிமிடங்களில் நாம் இறங்கும் பகுதியை அடைந்துவிடலாம், பாதுகாப்பு உள்ளிட்ட நிறைய வசதிகள் இருக்கின்றன.

ஆனால் ஆட்டோவில் தாராளமாக 3 பேர் கூட உட்கார முடியாது. இதற்கு கிட்டதட்ட 30 ரூபாய் கட்டணம் அதிகம். இந்த பதிவு விவாதத்திற்குள்ளாகியுள்ளது. ஒவ்வொரு போக்குவரத்து வாகனங்களிலும் விலை மாறுதல்கள் குறித்தும் பயனாளிகள் பேசி வருகிறார்கள்.

கர்நாடகா அரசு ஆட்டோ சங்கங்களுடன் பேசி, விலையை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஆட்டோக்கள், பெட்ரோல் டீசல் விலையை காரணம் காட்டி கட்டணத்தை அதிகரிக்கின்றன. எனவே அவர்களுக்கு எலக்ட்ரிக் ஆட்டோக்களை வாங்க உதவ வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

bangalore transport

வேகம், பாதுகாப்பு, சவுகரியம் உள்ளிட்டவைகளுக்காக சிலர் மெட்ரோ பயணம் சிறந்தது என்கிறார்கள். மெட்ரோவில் ஏசி வசதி இருக்கிறது. தாராளமாக 3 பேர் பயணிக்கலாம். ஆனால் ஆட்டோவில் நீண்ட தூர பயணங்களுக்கு 3 பேர் உட்கார்ந்து கொண்டு போக வசதிப்படாது என்கிறார்கள்.

கடந்த பிப் 9ஆம் தேதி பெங்களூர் மெட்ரோ ரயில் கழகம் கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்தியது. அது போல் பீக் ஹவர் என சொல்லப்படும் பிஸியான நேரங்களில் 5 சதவீதம் கூடுதல் கட்டணமும் மெட்ரோவில் வசூலிக்கப்படுகிறது.

இந்த கட்டண உயர்வால் மெட்ரோவில் ஒரு நாளைக்கு பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை 6.3 லட்சம் குறைந்துவிட்டது. எதிர்பார்த்த வருவாயும் கிடைக்கவில்லை என்கிறார்கள் மெட்ரோ அதிகாரிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+