"உயிரை பறித்த விபரீத விளையாட்டு.." ஆசனவாயில் அதிவேக காற்று.. குடல் வெடித்து பெங்களூர் இளைஞர் மரணம்!
பெங்களூர்: கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் தனது நண்பரின் ஆசனவாயில் விளையாட்டுத்தனமாக காற்றை செலுத்தவே இதனால் குடல் வெடித்து அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நமது வீட்டிலோ அல்லது வேலை செய்யும் இடத்திலோ இருக்கும் ஆபத்தான கருவிகளில் விளையாடக்கூடாது என்று பொதுவாக பெரியவர்கள் சொல்வார்கள்.

ஏனென்றால் சில நேரங்களில் விளையாட்டுத்தனமாக நாம் செய்யும் காரியம் கூட வினையாக மாறலாம். அப்படியொரு ஷாக் சம்பவம் தான் கர்நாடக தலைநகர் பெங்களூரில் நடந்துள்ளது.
ஒருவர் உயிரிழப்பு: பெங்களூரில் பைக், கார் வாஷிங் சென்டரை நடத்தி வரும் நபர் ஒருவர் அவரது நண்பரின் ஆசனவாயில் உயர் அழுத்த காற்றை செலுத்தி இருக்கிறார். விளையாட்டுதனமாக அவர் செய்த இந்த காரியத்தால் அவரது நண்பர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
என்ன நடந்தது: பெங்களூர் புறநகர் பகுதியான தேவனஹள்ளி என்ற பகுதியில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த நபர் யோகேஷ் என்றும் அவர் அங்கே உணவு டெலிவரி ஏஜெண்டாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. காற்று அதீத அழுதத்தில் உள்ளே உடலில் செலுத்தப்பட்டதாகவும் இதனால் உள் உறுப்புகளில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். குடல் வெடித்து சிதறியதே விபத்திற்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்..
உயிரிழந்த அந்த நபர் தனது தந்தை மற்றும் சகோதரியுடன் தனிசந்திராவில் வசித்து வந்துள்ளார். கடந்த மார்ச் 25ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட முரளி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசார் தகவல்: இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "அவர்கள் விளையாட்டுதனமாக இதை செய்துள்ளனர். வண்டிகளில் அழுக்கை அகற்றப் பயன்படுத்தப்படும் சாதனத்திலிருந்து உயர் அழுத்தம் கொண்ட காற்றை அவரது முகத்தில் செலுத்தி இருக்கிறார். காற்று படுவேகமாக முகத்தில் அடிக்கவே யோகேஷ் முகத்தை மறைக்க மூடிக் கொண்டுள்ளார். இதனால் யோகேஷின் ஆசனவாயுவில் முரளி காற்றை செலுத்தி உள்ளார். இதனால் நிலைதடுமாறிய யோகேஷுக்கு கீழே விழுந்துள்ளார்" என்றார்.
உயர் அழுத்தம் கொண்ட காற்று அவரது உடலில் செலுத்தப்பட்டதே அவரது மரணத்திற்கு காரணமாக இருந்துள்ளது. யோகேஷின் சகோதரியின் திருமணம் விரைவில் நடக்க இருந்தது. இதற்காக அவர் தனது பைக்கை சர்வீஸுக்கு கொடுத்துள்ளார். அப்போது வண்டியை எடுக்க சென்ற போது தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இரண்டு நண்பர்கள் விளையாட்டுதனமாக செய்த காரியம் ஒருவர் உயிரையே பறித்துள்ளது. இதன் காரணமாகவே இதுபோன்ற கருவிகளில் விளையாடக்கூடாது.. இல்லையென்றால் அதுவே விணையாகி போகும் என்று எச்சரிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications