ஒன்னும் சரியில்லை.. பெங்களூரில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா.. தினமும் ஆயிரத்திற்கு மேல் கேஸ்கள்
பெங்களூர்: பெங்களூர் நகரில் ஒரே நாளில் 1,148 கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ள நிலையில், பெங்களூர் நகர மொத்த கேஸ்கள் எண்ணிக்கை 10,103 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளன. கொரோனா பாதிப்பை வெற்றிகரமாக கையாண்ட நகரம் என்று பெயர் பெற்ற பெங்களூர் இப்போது, சென்னை பாணியில் பயணித்துக் கொண்டு இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில், புதன்கிழமை 2,062 புதிய கொரோனா கேஸ்கள் பதிவாகின. எனவே மொத்த கேஸ்கள் எண்ணிக்கை 28,877 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளளது.
பெங்களூரில் 54 பேர் பலியானதாக நேற்றைய புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. இதுவரை பதிவான இறப்பு எண்ணிக்கையில் இதுதான் அதிகமாகும்.

சேகரிப்பு
அதேநேரம், இந்த இறப்புகள் அனைத்தும் ஒரே நாளில் நிகழவில்லை, கடந்த சில வாரங்களாக ஜூன் 17 அன்று நடந்த ஒரு மரணம் உட்பட விடுபட்டு சேகரிக்கப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை இதுதான்.

மோசமான கட்டமைப்பு
நேற்றைய புள்ளி விவரத்தில் அதிர்ச்சியளிக்க கூடிய 3 தகவல் உள்ளது. அதில் 2 பேர் இறந்த பிறகு, மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். ஒரு நோயாளி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்துள்ளார். இது மோசமான மருத்துவ கட்டமைப்பை அம்பலப்படுத்தும் வகையில் உள்ளது.

சிறுவனுக்கு பாதிப்பு
இறந்தவர்களில், 90 வயதான பெண், 14 வயது சிறுவன் ஒருவர். இருவரும் பெங்களூர்வாசிகள். இன்ஃப்ளூயன்சா போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள். கோவிட் 19ம் சேர்ந்து கொண்டதால் அவர்கள் இறந்ததாக கூறப்பட்டுள்ளது.

போக்குவரத்து
தமிழகத்திலிருந்து வருவோரை பெங்களூருக்குள் விடாமல் தடுத்து வந்தது கர்நாடக அரசு. இதற்கு காரணம், தமிழகத்தில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு இருப்பதுதான். ஆனால், பஸ், ஆட்டோ இயக்கத்தை உள்ளூரில் ஆரம்பித்த பிறகு, கொரோனா பரவல் பெங்களூரிலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
‘பப்ஜி' கேமால் சிதைந்த குடும்பம்.. தந்தை - அக்காளை கொன்ற இளைஞர்.. தாய் உயிருக்கு போராட்டம் -
தந்தை - மகனை காப்பாற்றிய பூனை.. வீட்டு மேற்கூரை இடிந்தபோது என்ன நடந்தது? கர்நாடகாவில் நெகிழ்ச்சி -
கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாருக்கு சூனியம்? பெங்களூர் வீட்டருகே தலையின்றி கிடந்த சேவல் + எலுமிச்சையால் ஷாக் -
பெங்களூர் பன்னரகட்டா ரோட்டில் மெட்ரோ ரயில் சேவை.. வெளியான குட்நியூஸ்! செம -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications