சந்திரயான்-3ஐ நாங்கள் ஏவிட்டோம்.. ராகுல்யானை சோனியாவால் ஏவ முடியவில்லை..! அமித் ஷா நேரடி அட்டாக்!
பெங்களூரு: சந்திரயான் -3ஐ தாங்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய நிலையில், சோனியா காந்தி கிட்டத்தட்ட 20 முறை ராகுல்யானை ஏவ முயன்று ஒவ்வொரு முறையும் பரிதாபமாக தோல்வியடைந்தார் என அமித்ஷா கிண்டல் செய்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில் இந்தியா முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்து இருக்கும் நிலையில் இன்னும் ஐந்து கட்ட வாக்குப்பதிவுகள் மிச்சம் இருக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர் அமித்ஷா காங்கிரஸின் ராகுல் காந்தி பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும், அந்தந்த மாநில அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தல்: நாடாளுமன்ற தேர்தல்: வரும் 7, 13, 20, 25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல்கள் நடக்க இருக்கும் நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி 7 மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவானது நடைபெற இருக்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் நான்காம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. அங்கு தான் ராகுல் காந்தியும் போட்டியிட இருக்கிறார். ஏற்கனவே கேரளாவிலும் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
ரேபரேலி: அங்குள்ள அமேதி மற்றும் ரேபரேலியில் காங்கிரஸின் காந்தி குடும்பமே போட்டியிட்டு வந்த நிலையில், கடந்த தேர்தலில் ரேபரேலியில் ராகுல் காந்தி தோல்வியடைந்தார். இந்த நிலையில் தற்போது ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதே போல அமேதி தொகுதியில் கிஷோரி லால் சர்மா போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. கடந்த தேர்தலில் அமேதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வியை சந்தித்த நிலையில், கேரளாவின் வயநாட்டில் வெற்றி பெற்றார். இதனை வைத்து தோல்வி பயத்தில் ராகுல் இருப்பதாக பாஜக விமர்சித்து வருகிறது.
அமித் ஷா: சோனியா காந்தி கிட்டத்தட்ட 20 முறை ராகுல்யானை ஏவ முயன்று ஒவ்வொரு முறையும் பரிதாபமாக தோல்வியடைந்தார் என அமித்ஷா கிண்டல் செய்துள்ளார். கர்நாடமா மாநிலம் பெலகாவியில் பிரசாரத்தில் பேசிய அவர்,"பாஜக ஆட்சியில் சந்திரயான்-3ஐ நாங்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினோம். ஆனால் சோனியா காந்தியோ கிட்டத்தட்ட 20 முறையாவது ராகுல்யானை ஏவ முயன்றார். ஆனால் பரிதாபகரமாக ஒவ்வொரு முறையும் தோல்வியடைந்தார். அமேதி தொகுதியில் போட்டியிட வேண்டிய ராகுல் காந்தி தற்போது ரேபரேலி தொகுதிக்கு மாறி இருக்கிறார்.
ராகுல் காந்தி: ரேபரேலியில் பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங்கிடம் அதிக வாக்கு வித்தியாசத்தில் ராகுல் பாபா தோல்வி அடைவார். ஒரு பக்கம் 12 லட்சம் கோடி ஊழல் செய்த காங்கிரஸ் கட்சியும் , மறுபுறம் 23 ஆண்டுகளாக எந்த ஒரு குற்றச்சாட்டு இல்லாமல் முதல்வராகவும் பிரதமராகவும் நாட்டுக்கு சேவை செய்பவராக பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை விடுமுறையை கொண்டாடுவதற்காக வெளிநாடுகளுக்கு செல்கிறார் ராகுல் பாபா. மறுபுறம் கடந்த 23 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் பிரதமர் மோடி இருந்திருக்கிறார்" என பேசினார்.












Click it and Unblock the Notifications