சிக்கலில் பிரகாஷ் ராஜ்.. சந்திரயான்-3 திட்டத்தை கேலி செய்வதா? பொங்கிய இந்து அமைப்புகள்..வழக்கு பதிவு
பெங்களூர்: சந்திரயான் 3 விண்கலம் திட்டத்தை கேலி சேய்யும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்து அமைப்புகள் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்திரயான் 3 விண்கலம் நாளை நிலவில் தரையிறங்க உள்ளது. நிலவு குறித்த ஆராய்ச்சியில் முக்கிய மைல் கல் ஆக இருக்கும் இந்த சந்திரயான் விண்கலம் திட்டம் இந்தியா மட்டும் இன்றி உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா நிகழ்த்த போகும் இந்த சரித்திர சாதனையை இந்தியாவின் 140 கோடி மக்களும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

கடந்த சில தினங்களாகவே சந்திரயான் 3 விண்கலம் குறித்தே சமூக வலைத்தளங்களிலும் மக்கள் அதிகமாக பதிவிடுவதைக் காண முடிகிறது. தற்போது நிலவுக்கு நெருக்கமாக சுற்றி வரும் விக்ரம் லேண்டர் நாளை மாலை 6.04 மணியளவில் தரையிறங்க உள்ளது. நிலவில் முத்திரை பதிக்கும் இஸ்ரோவின் சாதனை குறித்து, அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில், பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், நேற்று தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், "வாவ்... நிலவில் இருந்து விக்ரம் லேண்டர் அனுப்பிய முதல் புகைப்படம் என கேப்ஷன் பதிவிட்டு ஒருவர் டீ ஆற்றுவது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். #justasking என்ற ஹேஷ்டேக்குடன் இதை பிரகாஷ் ராஜ் பதிவிட்டு இருக்கிறார். நடிகர் பிரகாஷ்ராஜ், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரக்கூடியவர்.
இந்த நிலையில், மோடியை விமர்சிக்கும் விதமாக சந்திரயான் 3 விண்கலம் திட்டத்தை பிரகாஷ் ராஜ் கேலி செய்து இருப்பதாக நெட்டிசன்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், பிரகாஷ் ராஜ் மீது இந்து அமைப்புகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். கர்நாடகாவின் பகால்கோட் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் இந்த புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் பிரகாஷ் ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications