Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடகாவில் இனி காங்கிரஸ் தோற்கும்.. நடிகர் பிரகாஷ் ராஜ் சொன்ன தகவல்.. விமர்சனத்தின் பின்னணி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ‛‛அரசியலில் எதிர்க்கட்சிகள் எப்போது ஜெயிப்பது இல்லை. ஆளும் கட்சி தான் தோற்கடிக்கப்படுகிறது. இப்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி தான் எதிர்காலத்தில் தோல்வியை சந்திக்கும்'' என்று நடிகர் பிரகாஷ் ராஜ் பரபரப்பாக கூறியுள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ்.. தமிழ், கன்னடம், தெலுங்கு உள்பட பல மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகராக இருப்பவர். இவர் பாஜகவை கடுமையாக எதிர்த்து வருகிறார். பாஜக மதத்தின் அடிப்படையில் அரசியல் செய்வதாக பலமுறை விமர்சனம் செய்து உள்ளார்.

prakash raj karnataka congress

அதுமட்டுமின்றி பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்களை பொது மேடைகளில் பிரகாஷ் ராஜ் கடுமையாக சாடி உள்ளார். இந்நிலையில் தான் கர்நாடகா மாநிலம் மங்களூரில் நடிகர் பிரகாஷ் ராஜ் கூறிய கருத்து பரபரப்பை கிளப்பி உள்ளது.

அதாவது கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவக்குமார் ஆகியோர் செயல்பட்டு வருகிறார். இப்படியான சூழலில் தான் காங்கிரஸ் கட்சி எதிர்காலத்தில் தோல்வியை சந்திக்கும் என்று பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். பாஜகவை மட்டுமே விமர்சனம் செய்து வந்த பிரகாஷ் ராஜ் தற்போது காங்கிரஸ் கட்சி மீது இப்படி கூறியிருப்பது பேசும்பொருளாகி உள்ளது.

கர்நாடகா மாநிலம் மங்களூரில் நடிகர் பிரகாஜ் ராஜ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛மாநிலத்தில் (கர்நாடகாவில்)நலத்திட்டங்களை செயல்படுத்த அரசிடம் போதிய நிதி இல்லை என்று சொல்லப்படுகிறது. ரூ.15 ஆயிரம் கோடிக்கு நஷ்டம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பட்ஜெட் தாக்கல் செய்வதில் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது'' என்று கேள்வி கேட்கப்பட்டது.

இந்த கேள்விக்கு நடிகர் பிரகாஷ் ராஜ், ‛‛காங்கிரஸ் கட்சி இப்போது ஆட்சியில் உள்ளது. அவர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால் அரசியலில் எதிர்க்கட்சிகள் எப்போது ஜெயிப்பது இல்லை. ஆளும் கட்சி தான் தோற்கடிக்கப்படுகிறது. இப்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சி தான் தோல்வியை சந்திக்கும். இந்த தோல்வி என்பது முந்தைய ஆட்சியை எப்படி கொடுத்தார்கள் என்பதன் அடிப்படையில் தான் அமையும்.

நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றால் அவர்கள் பிசினஸா செய்கிறார்கள்? நம் நாட்டிலும் சரி, ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் பணத்தில் தான் அரசுகள் நடக்கின்றன. இதனால் அரசு எங்கு தோல்வியடைந்தது என்பது பற்றி கேள்வி கேட்க வேண்டும். எங்கு கடன் அதிகரித்தது? அதனை சரிசெய்யாதது ஏன்? என்பது பற்றி கேள்வி எழுப்ப வேண்டி உள்ளது.

சமீபத்தில் கூட உச்சநீதிமன்றம் இலவச திட்டங்களால் மக்கள் வேலை செய்ய விரும்புவது இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளது. இல்லாதவர்களுக்கு இலவச திட்டங்களை வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது. பெரிய நிறுவனங்களில் கடன்களை தள்ளுபடி செய்யப்படுவது பற்றியதில் என்ன நிலைப்பாடு என்ற கேள்வி எழுகிறது. இதனால் எந்த கட்சி மாநிலத்தை ஆள்கிறது என்பதை பாராமல் வரி செலுத்தும் மக்களின் பணத்தை அரசு எப்படி பயன்படுத்துகிறது என்பதன் அடிப்படையில் கேள்வி கேட்க வேண்டும்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+