பூமிக்கடியில் புதையல்.. காப்பர் பானையை திறந்து பார்த்தால் அரை கிலோ தங்கம்.. ‛ஓ மை காட்'
பெங்களூர்: புதிதாக வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது 8 ம் வகுப்பு மாணவனுக்கு புதையல் கிடைத்தது. காப்பர் குடம் நிறைய 470 கிராம் எடையில் தங்க நகைகள் இருந்தது.
கர்நாடகாவின் கதக் மாவட்டத்தில் லக்குந்திஎன்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் கங்கவ்வா பசவராஜ் ரித்தி. இவரது மகன் பெயர் பிரஜ்வல் ரித்தி. இவருக்கு 13 வயது ஆகிறது. 8 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தான் கங்கவ்வா தாங்கள் வசித்து வந்த வீட்டை இடித்துவிட்டு புதிதாக வீடு கட்டும் பணியை தொடங்கினார்.

இதற்கான அஸ்திவாரம் தோண்டப்பட்டது. அஸ்திவாரம் தோண்டும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அங்கு பசவராஜ் ரித்தியும் வேலை செய்து கொண்டிருந்தான்.
பூமிக்கடியில் காப்பர் பானை கிடைத்தது. பிரஜ்வல் ரித்தி உடனடியாக பானையை வெளியே எடுத்தார். அந்த பானையை திறந்து பார்த்தபோது உள்ளே தங்க நகைகள் இருந்தன. கம்மல், செயின், நெக்லஸ் உள்பட ஏராளமான தங்க நகைகள் இருந்தன. உடனடியாக தனது குடும்பத்தினரிடம் கூறினார்.
அவர்கள் பெரியவர்களிடம் கூறியதோடு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், தாசில்தாருடன் வந்து புதையலை கைப்பற்றி ஆய்வுக்காக எடுத்து சென்றனர். இதுபற்றி லக்குந்தி பாரம்பரிய பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் ஆணையர் சாரணு கோகேரி கூறுகையில், ‛‛புதையலில் மோதிரம், கைகச்செயின், வளையல், நெக்லஸ் உள்பட பல தங்க நகைகள் இருந்தன.
இந்த நகை எந்த காலக்கட்டத்தை சேர்ந்தது என்பது தெரியவில்லை. இதுபற்றி ஆய்வு செய்யப்படும். ஆனால் பானையை பார்க்கும்போது இது பழங்காலத்தை சேர்ந்ததாக தெரிகிறது. இதுபற்றி தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆய்வு செய்து நகை எந்த காலத்தை சேர்ந்தது என்பதை தெரிவிப்பார்கள் ''என்றார்.
இதுபற்றி கதக் எஸ்பி ரோஹன் ஜெகதீஷ் கூறுகையில், ‛‛8 ம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரஜ்வல் ரித்தி புதையலை எடுத்தான். உடனடியாக கிராமத்தில் உள்ள பெரியவர்களிடம் கூறினார். அவனுடைய நேர்மையை பாராட்டுகிறோம். புதையல் ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். புதையல் கிடைத்த பானையி் மொத்தம் 22 தங்க நகைகள் இருந்தன. அதன் எடை 470 கிராம் ஆகும். காப்பர் பானை மட்டும் 630 கிராம் எடையுடன் இருந்தது. தற்போது புதையல் தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது'' என்றார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications