செம ஆச்சரியம்.. இருமல் சத்தத்தை வைத்தே கொரோனாவை அறியலாமா.. வரப்போகிறது "கோஸ்வரா".. அசத்தல் முயற்சி
இருமல் சத்தத்தை வைத்து கொரோனா அறிகுறி கண்டறிய முயற்சி நடந்து வருகிறது
பெங்களூரு: என்ன ஆச்சரியம்.. இருமல் சத்தத்தை வைத்தே நமக்கு கொரோனா இருக்கா, இல்லையா என்று கண்டுபிடிக்க முடியும் என்று அடித்து சொல்றார்கள் நம் நாட்டு ஆராய்ச்சியாளர்கள்!!
இந்த கொரோனாவைரஸ் உலகம் இதற்கு முன்பு கண்டிராதது.. புதுமையானது.. பயங்கரமானது.. லட்சக்கணக்கான விஞ்ஞானிகள் மண்டையை உடைத்து கொண்டு இதற்கு மருந்து கண்டுபிடிக்க ராப்பகலாக போராடி வருகிறார்கள்.

இந்த வைரசுக்கான அறிகுறியே இதுதான் என்று உறுதியாக ஒரு முடிவுக்கு வருவதற்குள், அறிகுறி இல்லாதவர்களையும் தாக்க தொடங்கிவிட்டதுதான் இதன் கொடூரமே.. அதனால் யாரை இந்த வைரஸ் தாக்கி இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதே பெரிய பிரச்சனையாக இருக்கிறது.
இந்த நேரத்தில்தான் நம்முடைய ஆராய்ச்சியாளர்கள் ஒரு நம்பிக்கை தகவலை தெரிவித்துள்ளனர்.. ஐஐஎஸ்சி அதாவது பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் இந்த வைரஸ் அறிகுறி குறித்த ஒரு முக்கியமான தகவலை கூறுகிறார்கள். இந்த குழுவில் ஐஐஎஸ்சி-யின் எலக்ட்ரிக் என்ஜினியங் உதவி பேராசிரியராக ஸ்ரீராம் கணபதியும் இணைந்துள்ளார். இருமல் சத்தத்தை கொண்டு கொரோனா நோயாளிகளை அடையாளம் காணலாம் என்று இவர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.
அதாவது, இருமல் மற்றும் பேசும்போது குரல் பதிவை கொண்டு இந்த அடையாளம் காணலாம் என்றும் நிச்சயம் இந்த தொழில் நுட்பத்தின் அடிப்படையில் மிக மிக வேகமாக கொரோனா நோயாளிகளை கண்டறியலாம் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, இந்த செலவும் மிகவும் குறைவாகத்தான் ஆகுமாம். இதை பற்றின ஏராளமான சோதனைகள் மேற்கொள்ள போவதாகவும், கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்தே அதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
கொரோனா பாதித்தவர்கள் இருமுவதற்கும், வேறு உடல்நலக் கோளாறு ஏற்பட்டு அதனால் இருமுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளதாகவும், அந்த இருமல் சத்தத்தின் வித்தியாசங்களை வைத்தே அறிகுறியை கண்டறிந்துவிட முடியும் என்கிறார்கள். இதற்கு "கோஸ்வரா" என்று ஒரு பெயரையும் வைத்துள்ளனர்.
இதன் அடிப்படையே இருமல் சத்தம் மற்றும் குரல் பதிவுதான்.. இந்த டெக்னாலஜியை செல்போனில் அல்லது சோஷியல் மீடியாவில் ஆப்களாக கொண்டு வரவும் திட்டமிட்டு வருகிறார்கள்.. அப்படி பதிவு செய்துவிட்டால், கொரோனா பாதித்து யார் இருமினாலும் இதில் தெரிந்துவிடுமாம்.. கொரோனா பாதித்தவரின் இருமல் மற்றும் குரல் பதிவு, அதேபோல வேறு பிரச்சனையால் பாதித்தவரின் இருமல் மற்றும் குரல் பதிவினை சேகரித்து வருகிறார்கள்.
அதன் மாதிரியில் சோதனைகளும் நடந்து வருகிறது. இதுவரை சோதனை நடத்தியதில் சில பாசிட்டிவ் விஷயங்களும் கிடைத்துள்ளன.. இரண்டு வித இருமல்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.. இருமல் சத்தம் வித்தியாசமாக கேட்கிறதாம்.. இருந்தாலும் குறைவான டெஸ்ட்கள் தான் இதுவரை செய்யப்பட்டுள்ளதால், இன்னும் கூடுதலான பரிசோதனைகள் நடந்து வருகின்றன.
அதன் முடிவுகளும் தெரிந்துவிட்டால், இனி யாருக்கெல்லாம் இந்த கொரோனா பாதிப்பு இருக்குமோ, அவர்களை எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.. ஒரு பெரிய பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தது போலவும் நமக்கு இருக்கும்!!
-
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications