தம்பதிகளின் ஜாலியால்.. ஆணுறை மட்டுமில்ல.. இந்த விற்பனையும் ஜோர்.. எல்லாத்துக்கும் காரணம் லாக்டவுன்

கர்ப்பதடை மாத்திரை விற்பனை பெங்களூருவில் அதிகமாகி இருப்பதாக கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: ஆணுறைகள்தான் விற்பனைதான் அதிகமாயிடுச்சுன்னு பார்த்தால், கர்ப்ப தடை மாத்திரைகள், கர்ப்ப பரிசோதனை கருவிகள் என இவைகளின் விற்பனைகூட சூடு பிடித்திருக்கிறாராம்.. அதாவது தம்பதிகள் சந்தோஷமாக இந்த 2-ம் கட்ட லாக்டவுனை அனுபவிக்கிறார்கள் என்றே தெரிகிறது.

Recommended Video

    உலகம் முழுவதும் காண்டம் தட்டுப்பாடு...முடங்கிய உற்பத்தி ஆலைகள்

    வைரஸ் தொற்று நாட்டிற்குள் பரவலாக பரவி கொண்டிருக்கிறது.. அதனால் லாக்டவுனை மறுபடியும் நீட்டித்துள்ளனர்.. 2-ம் கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், பொதுமக்களும் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

    இந்த வைரஸுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.. அதனால் தொற்றில் இருந்து தப்பிக்க ஒரே வழி வீட்டிற்குள் இருப்பதுதான் என்பதால்தான் அந்தந்த நாட்டு அரசுகள் லாக்டவுனை அமலில் கொண்டு வந்துள்ளன.

    நன்மை

    நன்மை

    இதனால் வேறு வழியில்லாமல் எல்லாருமே வீட்டில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.. இது ஒருவிதத்தில் தொற்று பரவாமல் நன்மையையும் அளித்து வருகிறது என்றாலும் வேறு ஒரு சமாச்சாரத்திலும் நல்ல விஷயத்தை ஏற்படுத்தி வருகிறது. தம்பதிக்குள் நெருக்கம் கூடிவிட்டதாம்.. அளவுக்கு அதிகமாக ரொமான்ஸ் ஏற்பட்டு, இதன் விளைவு கடைசியில், கர்ப்ப பரிசோதனை கருவிகள், கருத்தடை மாத்திரைகளின் விற்பனையை 50 சதவீதம் அதிகப்படுத்தியும் வருகிறதாம்.

    கருத்தடை மாத்திரை

    கருத்தடை மாத்திரை

    ஏற்கனவே லாக்டவுன் பிறப்பித்த அடுத்த 2 நாளிலேயே ஆணுறை விற்பனை அதிகமாகிவிட்டதாக ஆய்வில் செய்திகள் வந்தன. இப்போது கருத்தடை மாத்திரைகளின் விற்பனையும் அதிகமாகிவிட்டது. இதை பற்றி பெங்களூரு சந்திரா லேஅவுட் பகுதியில் உள்ள அப்போலோ மெடிக்கல்ஸின் ஊழியர் சொன்னபோது, "லாக்டவுன் போட்டதில் இருந்தே கர்ப்ப பரிசோதனை கருவிகள், கருத்தடை மாத்திரைகளின் விற்பனை அதிகமாயிட்டே இருக்கு.. ஆனா எவ்வளோ விற்பனை ஆனதுன்னு கரெக்ட்டா, துல்லியமா சொல்ல முடியாது.

    தட்டுப்பாடு

    தட்டுப்பாடு

    ஆனால் 50 சதவீத அளவுக்கு விற்பனை அதிகமாகி இருக்குன்னு சொல்லலாம்.. அந்த தேவைக்கான இருப்பு எங்ககிட்டயும் போதுமான அளவு இருக்கு.. அதனால எந்த தட்டுப்பாடு கிடையாது. இருந்தாலும், சானிடைசர்கள், சில மருந்துகளுக்கு மட்டும் தட்டுப்பாடு நிலவுகிறது என்றார். அதேபோல, அட்டிகுபேவில் உள்ள ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் ஒருவர் சொல்லும்போது, "ஒவ்வொரு மாசமும் 14-15 பெட்டிகள் கருத்தடை மாத்திரைகள் விற்பனையாகி வந்தன.. ஆனால் லாக் டவுன் தொடங்கியதில் இருந்து ஏப்ரல் 14ம் தேதி வரை 25 பாக்ஸ்-களுக்கு மேல் விற்கப்பட்டன... கர்ப்ப பரிசோதனை விற்பனை 3 மடங்சுக இப்போ ஜாஸ்தியாகிவிட்டது" என்றார்.

    கர்ப்ப பரிசோதனை

    கர்ப்ப பரிசோதனை

    இந்த சமாச்சாரம் தொடர்பாக டண்ஸோ நிறுவனம், கடந்த மார்ச் மாதம் ஒரு ஆய்வினை நடத்தியது.. அந்த ஆய்வில் பெங்களூரு, புனே போன்ற இடங்களில் கர்ப்ப பரிசோதனை உபகரணங்கள் ஏராளமாக ஆர்டர் செய்யப்பட்டு உள்ளது தெரியவந்தது... ஐதராபாத்தில் கருத்தடை மாத்திரைகள் அதிகமாக விற்கப்பட்டன என்றால், மும்பையில் வெறும் காண்டம்தான் அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. அதாவது நகர்ப்புற பகுதிகளைவிட குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் மெடிக்கல் ஷாப்களில்தான் இந்த விற்பனை ஜரூராக நடந்து வருகிறது.

    மாத்திரைகள்

    மாத்திரைகள்

    ஏனென்றால் எல்லாருமே வீட்டில் இருக்கிறார்கள்.. வேலையும் வீட்டில் இருந்துதான் செய்கிறார்கள்.. அதனாலதான் பக்கத்திலேயே இருக்கும் மெடிக்கல் ஷாப்களில் தேவையானதை வாங்கி கொள்கிறார்கள்.. இதே கருத்தைதான், ரெசிடென்சி ரோட்டில் உள்ள மெடிக்கல் ஷாப் ஓனர் ஒருவரும் சொல்கிறார்.. எப்பவுமே கர்ப்ப பரிசோதனை கிட்ஸ், கருத்தடை மாத்திரைகள் 20 பெட்டிகள் சேல்ஸ் ஆகும்.. ஆனா இப்போ 5-6 பெட்டிகள் மட்டும்தான் விற்பனை ஆகிறது" என்றார்!!

    சமாச்சாரங்கள்

    சமாச்சாரங்கள்

    எதையோ நினைத்து பயந்து கொண்டு லாக்டவுன் பிறப்பித்தால், வேறு சில சமாச்சாரங்கள் நடந்து வருகிறது.. கர்ப்பத்தடை மாத்திரை, காண்டம், டெஸ்ட் கருவிகள் என எல்லாமே வியாபாரம் பிய்த்து கொண்டு போகிறது.. எப்படியோ தம்பதிகள் சந்தோஷமா இருந்தால் சரி!!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+