Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த விஷயம் என்னை கடுமையாக பாதித்தது.. பாஜகவின் முக்கிய உறுப்பினர் மீது டிகே சிவக்குமார் வழக்கு!

முன்னாள் அமைச்சரும் பாஜகவை சேர்ந்த முக்கிய உறுப்பினருமான பி பாட்டில் யட்னால் மீது காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் டிகே சிவக்குமார் வழக்கு போட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: முன்னாள் அமைச்சரும் பாஜகவை சேர்ந்த முக்கிய உறுப்பினருமான பி பாட்டில் யட்னால் மீது காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் டிகே சிவக்குமார் வழக்கு போட்டுள்ளார்.

கர்நாடகாவில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்த்ததை அடுத்து எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.மஜத - காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் 17 பேர் ராஜினாமா கடிதம் அளித்ததால் ஆட்சி கவிழ்ந்தது.

DK Shivakumar,Congress filed a defamation case against BJP leader BP Yatnal

கடந்த வாரம் திங்கள் அன்று வாரம் பெரும்பான்மையை நிரூபித்த எடியூரப்பா 105 எம்எல்ஏக்கள் பலத்துடன் ஆட்சி நடத்தி வருகிறார். இந்த தோல்வி காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர்களை கலங்கடித்துள்ளது.

அதே சமயம் காங்கிரஸ் கட்சியிலேயே சில தலைவர்கள் ஆட்சி கவிழ வேண்டும் என்று பின்வேலை பார்த்தார்கள் என்று புகார் எழுந்துள்ளது. முக்கியமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் டிகே சிவக்குமார், ஆட்சி கவிழ வேண்டும் என்று மறைமுகமாக வேலை பார்த்தார் என்று பாஜகவை சேர்ந்த முக்கிய உறுப்பினரான பி பாட்டில் யட்னால் குற்றச்சாட்டு வைத்தார்.

அதாவது டிகே சிவக்குமார் மஜத ஆட்சி கவிழ வேண்டும் என்று மறைமுகமாக வேலை பார்த்தார். சிவக்குமார் மீது நிறைய வழக்கு உள்ளது. பாஜகவை அரசு இதை வைத்து அவரை லாக் செய்யும் என்பதால் அவர் மஜத ஆட்சிக்கு எதிராக செயல்ப்பட்டார் என்று யட்னால் கூறினார்.

இதனால் கோபம் அடைந்த டி கே சிவக்குமார் தற்போது பி பாட்டில் யட்னால் மீது வழக்கு தொடுத்துள்ளார். பி பாட்டில் யட்னால் மீது மானநஷ்ட வழக்கு தொடுத்த சிவக்குமார் பேட்டி அளித்துள்ளார்.

அதில், நான் மத்திய அரசின் உதவியை நாடியதாக யட்னால் கூறியுள்ளார். நான் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறைக்கு பயந்து மத்திய அரசுக்கு மறைமுகமாக உதவி செய்தேன் என்று அவர் கூறியுள்ளார். அதேபோல் பாஜக ஆட்சி அமைக்க நான் உதவினேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதை கேட்க எனக்கு வருத்தமாக இருந்தது. அதேபோல் இது என்னுடைய தூய்மைக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் இருந்தது. நான் சாதாரண காங்கிரஸ் உறுப்பினர்.

நான் எங்கும் பின் வாசல் வழியாக வர மாட்டேன். எனக்கு முதுகில் குத்த தெரியாது. ஆனால் என்னையே அவர் களங்கப்படுத்தும் அளவிற்கு பேசிவிட்டார். அதனால் அவருக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளேன், என்று சிவக்குமார் பேட்டி அளித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+