ஹோலி கொண்டாட்டத்தின்போது ‘ரசாயன கலர் பொடி’ பூசிய கும்பல்.. 4 மாணவிகள் உடல்நிலை மோசம்!
பெங்களூர்: கர்நாடகாவில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது பள்ளி மாணவிகள் 7 பேர் மீது மர்ம கும்பல் ரசாயனம் கலந்த கலர் பொடியை பூசினர். இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மாணவிகள் 7 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மேஷ்வர் நகரில் நேற்று ஹோலி பண்டிகையின்போது, பள்ளி மாணவிகள் 7 பேர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். அவர்கள் 8 ஆம் வகுப்பு, 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள். அப்போது 3 இருசக்கர வாகனங்களில் வந்த மாணவர்கள் கும்பல் அந்த மாணவிகள் மீது ரசாயனம் கலந்த வண்ணப் பொடிகளை வீசினர்.

அந்த நேரத்தில் பேருந்து வந்ததால் அந்த மாணவிகள் அதில் ஏறினர். அவர்களை துரத்திச் சென்ற அந்த கும்பல், பேருந்தில் ஏறி அந்த மாணவிகள் மீது வண்ணப் பொடிகளைப் பூசியுள்ளது. அதில், பல்வேறு ரசாயனம் கலந்திருந்துள்ளது. இதனால் 7 பேருக்கும் மூச்சுத் திணறல், இருமல், நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து, பாதிக்கப்பட்ட மாணவிகளை மீட்டு கதக் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 7 மாணவிகளில் 4 மாணவிகளின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவர்கள் மேல் சிகிச்சைக்காக GIMS மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து, ரசாயன பொடிகளை தூவிவிட்டு தப்பிய இளைஞர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் இடையே பரபரப்பான சூழல் நிலவுகிறது.
ஹோலி பண்டிகை கொண்டாடப் பயன்படுத்தும் வண்ணப் பொடிகள் சிலவற்றில் ரசாயனம் கலந்திருக்கும். இதை பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். தற்போது வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருப்பதால், ரசாயன வண்ண பொடிகள் பயன்படுத்துவது, சருமத்தை மேலும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இத்தகைய பொடிகளை பயன்படுத்துவதையும் விற்பதையும் தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications