ரத்தம் கொதிக்குது.. மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டமே ஒரு நாடகம்.. பாஜக எம்பி அனந்தகுமார் ஹெக்டே
பெங்களூரு: மகாத்மா காந்தி நடத்திய சுதந்திர போராட்டமே ஒரு நாடகம் தான் என கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்பி அனந்தகுமார் ஹெக்டே சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்பி அனந்தகுமார் ஹெக்டே இவர் கடந்த ஐந்து ஆண்டுகள் மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்தவர் ஆவார். மீண்டும் பாஜக வெற்றி பெற்ற பின் அனந்தகுமார் ஹெக்டேவுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை.

இவர் தேசதந்தை மகாத்மா காந்தி குறித்து ஏற்கனவே சர்ச்சைக்குரிய வகையில் டுவிட்டரில் கருத்து பதிவிட்டு பின்னர் நான் அப்படி பதிவிடவே இல்லை. என் டுவிட்டரை யாரோ ஹேக்கிங் செய்துவிட்டார்கள் என்று கடந்த ஆண்டு கூறினார்.
இந்நிலையில் பெங்களூருவில் சனிக்கிழமை நடந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றில் அனந்தகுமார் ஹெக்டே கலந்து கொண்டு பேசினார், அப்போது அவர் மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் ஒரு நாடகம். ஆங்கிலேயர்கள் விரக்தியால் சுதந்திரம் வழங்கினார்கள். எனவே சுதந்திரத்தை போராட்ட வரலாறை படிக்கும் போதும், இப்படிப்பட்டவர்களை எப்படி இந்தியாவில் மகாத்மா என்ற அழைக்கிறார்கள் என்றும் என் ரத்தம் கொதிக்கிறது.
ஆங்கிலேயேர்களின் ஆதரவுடனே இத்தகைய போராட்டங்கள் நடந்தது. தலைவர்கள் என கூறிக்கொள்ளும் இத்தகைய நபர்கள் ஒருமுறை கூட போலீசாரால் தாக்கப்படவில்லை. இது ஒரு நேர்மையான போராட்டம் இல்லை" இவ்வாறு கூறினார்.
அனந்தகுமார் ஹெக்டேவின் இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கும் பாஜக மேலிடம், அவரை உடனே நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்குமாறு கேட்டுள்ளது. இதனிடையே காங்கிரஸ் கட்சி இதற்கு பதிலடி கொடுத்துள்ளது. மகாத்மா காந்தியின் போராட்டம் குறித்து எந்த நற்சான்று தேவையில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications