வாட்டும் வறட்சி.. மழை வேண்டி கர்நாடகாவில் தவளைகளுக்கு தாலி கட்டி கல்யாணம் செய்த பொதுமக்கள்!- வீடியோ
Recommended Video
பெங்களூரு: கர்நாடகாவில் கடுமையான வறட்சி வாட்டி வதைத்து வரும் நிலையில் மழை வேண்டி மக்கள் தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த 23 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. தென்னிந்திய மாநிலங்கள் மட்டுமின்றி வட மாநிலங்களும் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் தடுமாறி வருகின்றன.
பருவமழைகள் கைக்கொடுக்காத நிலையில் கோடை மழையும் ஏமாற்றியதால் நாடு முழுவதும் பெரும் வறட்சி நிலவி வருகிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் தண்ணீர் பஞ்சம் உச்சத்தை எட்டியுள்ளது.
#WATCH Frogs married in Karnataka's Udupi to please the rain gods. The frogs were dressed in custom made outfits for the ceremony. pic.twitter.com/s9I4rLT0Tu
— ANI (@ANI) June 8, 2019
இதேபோல் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் கடுமையான வெப்பமும் வறட்சியும் நிலவி வருகிறது. இந்நிலையில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் மழை வேண்டி கர்நாடக மாநிலம் உடுப்பியில் தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
குடிக்க நீரின்றி, வெயிலை தாக்கு பிடிக்க முடியாமல் பலியான 15 குரங்குகள்.. ம.பியில் நிகழ்ந்த துயரம்
மணமக்களை போன்றே தவளைகளுக்கும் திருமண உடை உடுத்தி மாலை அணிவித்து மேளதாளம் முழங்க தாலி கட்டி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திருமணம் முடிந்த கையோடு மணமக்களான தவளைகள் மீது அட்சதையும் தூவப்பட்டது.
வழக்கமாக மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படும். இந்நிலையில் தவளைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்ட இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.