கர்நாடகாவில் நாளை ஆட்சி கவிழும்... 'அண்ணாமலை' ஸ்டைலில் சவால் விடுத்த எடியூரப்பா
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு, நாளை கடைசி நாளாக அமையும் என முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். 'அண்ணாமலை' படத்தில் ரஜினி கூறும் வசனம் போல், அசோக், இந்த நாள குறிச்சு வச்சுக்கோ என, சவால் விடுத்துள்ளார் எடியூரப்பா.
ஆட்சிக்கு வந்து 13 மாதங்களே ஆகி இருக்கும் நிலையில், காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாள தள கூட்டணி அரசு கவிழும் நிலையில் ஊசலாடி வருகிறது. காங்கிரசை சேர்ந்த 13 எம்எல்ஏக்கள், மதசார்பற்ற ஜனதாதளத்தை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் என 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், நாளை (திங்கட்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், பெங்களூருவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த, எடியூரப்பா கூறியதாவது: கர்நாடக மாநிலத்தில் ஆளும் கூட்டணி கட்சிகளின் சட்டசபை கொறடா பிறப்பித்த உத்தரவுக்கு அவர்கள் கட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் யாருமே மதிப்பளிக்காத நிலையில் மெஜாரிட்டியை நிரூபிக்க தவணை வாங்கும் முயற்சிகளால் எந்த பலனும் ஏற்பட போவதில்லை என்றார்.
மேலும், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் கடந்த 17-ம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் 'மும்பையில் தங்கியுள்ள 15 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் சட்டசபைக்கு வந்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று யாரும் எந்த சூழ்நிலையிலும் அவர்களை வற்புறுத்த கூடாது.
நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க தயார் என்று காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, முதலமைச்சர் குமாரசாமி மற்றும் சபாநாயகர் ஆகியோர் திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், நாளைதான் குமாரசாமி தலைமையிலான அரசின் கடைசி நாளாக அமையும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், கர்நாடக அதிருப்தி சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் சங்கர், நாகேஷ் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில், குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் தாமதம் செய்து வருவதாக மனுவில் புகார் தெரிவித்துள்ளனர். நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே நேரம், சட்டசபையில், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக கூறப்படும் நிலையில், பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் இரவு கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைப்பெற்றது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications