அவர் எளிய மனிதர்.. உருகிய எடியூரப்பா.. உடைந்து அழுத குமாரசாமி.. சித்தார்த்தா உடலுக்கு அஞ்சலி!
காபி டே நிறுவனர் சித்தார்த்தா உடலுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
Recommended Video
பெங்களூர்: காபி டே நிறுவனர் சித்தார்த்தா உடலுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்று மாலை 6.30 மணிக்கு அவரின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்தியாவின் தனிப்பெரும் காபி ஷாப் நிறுவனமாக காபி டே வளர்ந்து நிற்கிறது. இதன் அசுர வளர்ச்சிக்கு காரணமான அதன் நிறுவனர் சித்தார்த்தா நேற்று முதல்நாள் தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று முதல்நாள் மாலை காபி டே நிறுவனர் சித்தார்த்தா திடீரென்று மாயமானது நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று முழுக்க மங்களூர் அருகே நேத்ராவாதி ஆற்றில் அவர் தேடப்பட்டு வந்தார்.

என்ன உடல்
இந்த நிலையில் இன்று அதிகாலை அவரின் உடல் மீனவர்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அரபிக்கடலில் மீன்பிடித்து திரும்பிய மீனவர்கள் நேத்ராவதி நதி அருகே அவரின் உடலை கண்டுபிடித்தனர். சித்தார்த்தா மரணத்திற்கு பொருளாதார பிரச்சனைதான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

உடல் ஒப்படைப்பு
இந்த நிலையில் சித்தார்த்தாவின் உடல் மங்களூரில் இருக்கும் வென்லாக் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரின் உடல் மொத்தம் 2 மணி நேரம் அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது அவரின் உடல் அஞ்சலிக்காக சிக்மங்களூரில் உள்ள அவரின் எஸ்டேட்டில் வைக்கப்பட்டுள்ளது.

குமாரசாமி அஞ்சலி
சித்தார்த்தாவின் உடலுக்கு அருகிலேயே அவரின் மாமனார் முன்னாள் அமைச்சர் எஸ்எம் கிருஷ்ணா அமர்ந்து இருந்தார். இந்த நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் மஜத மாநில தலைவர் குமாரசாமி அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்தும் போதே தன்னையும் அறியாமல் குமாரசாமி உடைந்து அழுதார்.

எடியூரப்பா அஞ்சலி
சித்தார்த்தா உடலுக்கு அஞ்சலி செலுத்திய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, சித்தார்த்தா மிகவும் எளிமையான மனிதர். இந்திய காபி துறையில் அவர் புதிய சாதனையை படைத்தார். எஸ்எம் கிருஷ்ணா போன்ற தலைவரின் ஆதரவு இருக்கும் நேரத்தில் அவர் ஏன் இப்படி தவறான முடிவை எடுத்தார் என்று தெரியவில்லை என்று, கூறியுள்ளார்.

இன்று மாலை
தற்போது தலைவர்களை அடுத்து முக்கிய தொழில் அதிபர்கள், காபி டேவின் முக்கிய ஊழியர்கள் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்று மாலை 6.30 மணிக்கு அவரின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications