விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிப்பு.. எங்கே தவறு நடந்திருக்கிறது.. விஞ்ஞானிகள் கருத்து
Recommended Video
பெங்களூர்: சந்திரயான் 2வில் உள்ள விக்ரம் லேண்டர் தரையிறங்குவதில் அதன் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டதில் மட்டும் நடந்துவிடவில்லை. விஞ்ஞானிகளே எதிர்பாராத வகையில் லேண்டர் தன் கட்டுப்பாட்டையும் இழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
4 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நிலவுக்கு சந்திரயான் 2 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம 22-ஆம் தேதி இஸ்ரோ அனுப்பியது. 40 நாட்கள் கழித்து சந்திரயான் 2 விண்கலத்தை சுற்று வட்ட பாதையில் நிலைநிறுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் கட்டளைகளை பிறப்பித்தனர்.
இந்த மாதம் முதல் வாரத்தில் பிரக்யான் ரோவரிலிருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்தது. இது வெற்றிக்கரமாக நிகழ்ந்தது. இந்த நிலையில் நிலவில் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வு நேற்று அதிகாலை நிகழ இருந்தது. இதற்காக இந்தியாவே தூங்காமல் விழித்திருந்தது.

வேதனை
சுமார் 95 சதவீதம் வெற்றி பெற்ற நிலையில் நிலவில் தரையிறங்குவதற்கு 2 . 1 கி.மீ. தூரத்தில் இருந்த விக்ரம் லேண்டரின் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் லேண்டர் தரையிறங்கியதா என தெரியவில்லை. இதனால் இஸ்ரோ தலைவர் உள்பட விஞ்ஞானிகளும் மன வேதனை அடைந்தனர்.

குறைப்பு
இந்த நிலையில் விக்ரம் லேண்டர் தரையிறங்குவதில் என்ன பிரச்சினை, எங்கு தவறு நடந்திருக்கும் என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தரையில் மெதுவாக லேண்டர் தரையிறங்குவது 3 கட்டங்களை கொண்டதாகும். விண்கலத்தின் வேகத்தை மெதுவாக குறைக்க வேண்டும். அது போல் அதன் உயரத்தையும் ஜீரோ அடையும் வரை மிகவும் மெதுவாக குறைக்க வேண்டும்.

10 நிமிடங்கள்
அதற்காக விக்ரம் லேண்டரில் 5 என்ஜின்கள் பொருத்தப்பட்டன. தரையிறங்க 10 நிமிடங்கள் 20 வினாடிகள் இருந்த போது விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது எப்படி நடந்திருக்கும் என்பது குறித்து விஞ்ஞானிகள் மட்டுமல்ல சாதாரண மக்களும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

தவறு
இந்த நிலையில் இந்த பிரச்சினை தொலை தொடர்பு பிரச்சினையாக மட்டும் இருக்காது என்றும் லேண்டர் தனது கட்டுப்பாட்டை இழந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த தவறு என்பது இரு கட்டங்களுக்கு இடையே நடந்திருக்கும். அதாவது லேண்டர் முழுவதுமாக தரையிறங்கும் கட்டத்திற்கும், மெதுவாக தரையிறங்கும் கட்டத்திற்கும் இடையே தவறு நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

லேண்டர்
தரையிறங்கும் பணிகள் 4 கட்டங்களாக நடந்து கொண்டிருந்தது. அதாவது 30 கி.மீ. தூரத்திலிருந்து 7.4 கி.மீ., 7.4 கி.மீ டூ 5 கி.மீ., 5 கிலோ மீட்டர் தூரம் முதல் 400 மீட்டர், 400 மீட்டர் தூரத்திலிருந்து தரையிறங்குதல் ஆகிய 4 கட்டங்கள் உள்ளன. இவை நடைபெறுவதற்கு முன்னரே நிலவிலிருந்து மேலே 2.1 கி.மீ. உயரத்தில் இருந்த போது சில தொழில்நுட்பக் கோளாறுகளால் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

விஞ்ஞானிகள்
லேண்டரின் வேகத்தை குறைக்கவும் உயரத்தை குறைக்கவும் பொருத்தப்பட்ட என்ஜின்கள் தற்போது இந்தியா முதல் முறையாக பயன்படுத்தியுள்ளது. இந்த 4 என்ஜின்களும் தரையிறங்குவதற்கு மட்டுமல்ல மிகச் சரியாக தரையிறங்கும்படி முறையாக ஒருங்கிணைத்தலோடு இயக்கப்பட்டிருக்க வேண்டும். தரையிரங்கும் நேரத்தில் இஸ்ரோ பிறப்பிக்கும் கட்டளைகளின் கீழ் செயல்படும் விதத்தில் முன்னதாகவே பிரோகிராமிங் செய்யபபட்டது. எனவே இந்த 4 என்ஜின்களில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு அதனால் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கலாம் என சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த நிலையில் லேண்டர் எங்கிருக்கிறது என்பது குறித்த புகைப்படங்களை ஆர்ப்பிட்டர் கருவி வெளியிட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications