நான் எடுக்கும் முடிவு வரலாறாக மாறும்.. கர்நாடக சபாநாயகர் அதிரடி பேட்டி
பெங்களூர்: நான் எடுக்கும் முடிவு வரலாறாக மாறும் என்பதால், சட்ட புத்தகத்தை, ஆய்வு செய்துதான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்எல்ஏக்களும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து, அந்த கடிதத்தை கர்நாடக சட்டசபை செயலாளரிடம் வழங்கினார்.
சபாநாயகர் தனது அலுவலகத்தில் இல்லாத நிலையில், இந்த கடிதங்களை சட்டசபை செயலாளரிடம் அவர்கள் கொடுத்திருந்தனர்.

அலுவலகம் வருகை
கர்நாடகா அரசியல் பிரச்சினை உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், சபாநாயகர் ரமேஷ் குமார் இன்று சட்டசபையில் உள்ள தனது அலுவலகம் வந்தார். சபாநாயகர் தனது இறுதி முடிவை என்று எடுக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சட்டசபைக்கு வெளியே அவர் நிருபர்களிடம் பேசினார். அப்போது நிருபர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்: யார், யார் ராஜினாமா கடிதம் கொடுத்து உள்ளார்களோ, என்ன காரணம் சொல்லி உள்ளார்களோ, எதுவுமே எனக்கு தெரியாது. நான் இப்போதுதான் அலுவலகத்தின் உள்ளே செல்ல போகிறேன். அலுவலகம் சென்ற பிறகு கடிதங்களை பரிசீலனை செய்வேன்.

வரலாறு
சட்டப் புத்தகங்கள் படித்து பார்த்து ஆய்வு செய்துதான் எனது முடிவை எடுக்க முடியும். நான் எடுக்கக் கூடிய முடிவு என்பது வரலாறாக மாறக்கூடியது என்பதை நான் அறிந்துள்ளேன். எனவே பொறுப்புடன் செயல்பட வேண்டிய நிலைமையில் உள்ளேன். எனக்கு யாரும் தலைவர் கிடையாது. அரசியல் சாசனம் மட்டுமே எனது தலைவர். அது என்ன சொல்கிறதோ அதன்படி, நான் அடுத்த கட்ட முடிவை அறிவிக்க உள்ளேன். இவ்வாறு ரமேஷ் குமார் தெரிவித்தார்.

ஆட்சி கலையும்
சபாநாயகர் ரமேஷ்குமார், இதுவரை எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்கவில்லை என்பதால், கர்நாடக அரசு பாதிப்பின்றி தொடர்ந்து கொண்டு உள்ளது. ஒருவேளை, அவர் அந்த ராஜினாமா கடிதங்களை ஏற்றால், அடுத்த நொடியே கர்நாடக அரசு பெரும்பான்மையை இழந்துவிடும். பின்னர், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கலைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

நேரடியாக வரனும்
இதனிடையே எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை பரிசீலனை செய்த ரமேஷ்குமார், எம்எல்ஏக்கள் என்னிடம் நேரடியாக கடிதங்களை கொடுக்காமல் அதன்மீது முடிவெடுப்பது என்பது சரியான நடைமுறையாக இருக்காது என்று சட்ட வல்லுநர்களிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!











Click it and Unblock the Notifications