ஜெயநகர் தொகுதியில் ட்விஸ்ட்! நள்ளிரவு தாண்டியும் முடிவு தெரியவில்லை.. மறு வாக்கு எண்ணிக்கை..பரபரப்பு

கர்நாடக சட்டமன்றத்திற்கு கடந்த 10 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் இடையே மும்முனை போட்டி நிலவியது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (13 ஆம் தேதி) எண்ணப்பட்டன.
இதில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு தேவையான 113 தொகுதிகளை தாண்டி காங்கிரஸ் வெற்றி பெற்றது. பாஜக 65 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களில் வென்றுள்ளது.
தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் நேற்று மாலையே தெரிந்து விட்ட போதிலும் ஜெயநகர் தொகுதியில் தொகுதியில் மட்டும் முடிவு தெரியவில்லை. காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டிக்கும் பாஜக வேட்பாளர் ராம மூர்த்திக்கு இடையே வாக்க்குவித்தியாசம் மிகக் குறைந்த அளவே இருந்தது.
சவுமியா ரெட்டி முன்னிலை இருந்தாலும் வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்ததால் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று ராமமூர்த்தி கோரிக்கை விடுத்தார். இதனால், மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. தபால் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டது. மூன்று முறை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றும் முடிவு அறிவிக்கப்படவில்லை.
தற்போது பாஜக வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. நள்ளிரவு தாண்டியும் முடிவு அறிவிப்பதில் தாமதம் நீடிக்கிறது. வாக்கு எண்ணும் மையத்திற்கு காங்கிரஸ் கட்சியின் டிகே சிவக்குமார் உள்ளிட்டோர் வருகை தந்தனர். இதனால் ஜெயநகர் தொகுதி முடிவு அறிவிப்பதில் நீடிக்கும் இழுபறியால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications