பாராசிட்டமால்-650 உட்பட 15 வகையான மருந்துகளுக்கு தடை! கர்நாடக அரசு அதிரடி உத்தரவு! என்ன காரணம்!
பெங்களூர்: நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் பாராசிட்டமால் உட்பட 15 வகையான மருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தரப் பரிசோதனையில் இவை அனைத்தும் உரியத் தரத்தில் இல்லை என்பது கண்டறியப்பட்டதால் இந்த 15 வகையான மருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன. இவை என்ன மருந்துகள்.. தடை குறித்து கர்நாடக அரசு சொல்வது என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நாம் எப்போதுமே மருத்துவர் ஆலோசனை உடனேயே மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், நமது நாட்டில் பெரும்பாலானோர் மருத்துவர் ஆலோசனை இல்லாமலேயே பலரும் மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள். மருந்தகத்தில் சொல்வதைக் கேட்டும் பலரும் மருந்துகளை எடுத்துக் கொள்வார்கள்.

மருந்துகள்
ஆனால், இதுபோல நிச்சயம் மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் ஒருவர் நிச்சயம் மருந்துகளை எடுத்துக் கொள்ளக்கூடாது என்றே தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், பாராசிட்டமால் உள்ளிட்ட பல மாத்திரைகளை நாம் எந்தவொரு ஆலோசனையும் இல்லாமல் எடுத்துக் கொள்வது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
15 மருந்துகளுக்குத் தடை
இதற்கிடையே கர்நாடகாவில் போதிய தரத்தில் இல்லை என கண்டறியப்பட்ட 15 மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மாநில மருந்து பரிசோதனைக் கூடத்தின் ஆய்வில், இந்த பொருட்கள் தரமற்றவை எனக் கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். பாராசிட்டமால் உட்பட 15 வகையான மருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மக்களும் இதைப் பயன்படுத்தக் கூடாது என்று சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் வலியுறுத்தினார். இந்த மருந்துகள் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் அபாயம் இருப்பதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Drugs Testing Laboratory, Karnataka, has opined that the following drugs/cosmetics as "Not of Standard Quality".
— Dinesh Gundu Rao/ದಿನೇಶ್ ಗುಂಡೂರಾವ್ (@dineshgrao) June 25, 2025
I urge all chemists, doctors, hospitals & nursing homes to IMMEDIATELY stop stocking/selling/using these products. If you have any stock, inform your local Drugs… pic.twitter.com/WDdwpv1QGf
தினேஷ் குண்டு ராவ் உத்தரவு
இது குறித்து அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் மேலும் கூறுகையில், "இந்த மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தரச் சோதனையில் தோல்வியடைந்துள்ளன. அனைத்து மருந்துக்கடை உரிமையாளர்கள், மருத்துவர்கள், மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்கள் உடனடியாக இவற்றை விற்பனை செய்வது, பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். உங்களிடம் கையிருப்பு இருந்தால் உள்ளூர் அதிகாரிகளிடம் இது குறித்துத் தெரிவிக்கவும். விதியை மீறி இதை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
கர்நாடக அரசு வலியுறுத்தல்
அனைத்து மருந்துக்கடை உரிமையாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், மருத்துவ நிறுவனங்கள் உடனடியாக இந்த உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, தடை செய்யப்பட்ட பொருட்கள் கையிருப்பில் இருந்தால் அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரப்பூர்வ உத்தரவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. உடல்நல பாதிப்பு ஏற்படலாம் என்பதால் இந்த பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று பொதுமக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எந்த மருந்துகள் எல்லாம் தடை செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த விவரத்தையும் அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் பாராசிட்டமால், அயர்ன் சுக்ரோஸ் இன்ஜக்ஷன் உட்பட 15 மருந்துகள் இடம் பெற்றுள்ளன. மேலும், இந்த மருந்துகளில் எந்த பேட்ச் பரிசோதனை செய்யப்பட்டன என்பது உள்ளிட்ட விவரங்களும் அதில் இடம் பெற்றுள்ளன. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications