ரூ.40 லட்சம் லஞ்சம்.. கர்நாடகா பாஜக எம்எல்ஏ மகனை தட்டித்தூக்கிய லோக்ஆயுக்தா..ரூ.7.70 கோடி பறிமுதல்
பெங்களூர்: கர்நாடகா பாஜக எம்எல்ஏவான மதல் விருபாக்சப்பா சார்பில் டெண்டர் விவகாரத்தில் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய அவரது மகனான அரசு அதிகாரியான பிரசாந்த் மதலை லோக்ஆயுக்தா அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். மேலும் பிரசாந்த் மதல் அலுவலகத்தில் இருந்து 1.70 கோடியும், மதல் விருபாக்சப்பாவின் எம்எல்ஏ அலுவலகத்தில் ரூ.6 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கர்நாடகா பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ள நிலையில் இந்த சம்பவம் அக்கட்சிக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் மதல் விருபாக்சப்பா. இவர் பாஜக கட்சியை சேர்ந்தவர். இவர் கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட் (கேஎஸ்டிஎல்) தலைவராக இருக்கிறார்.
இவரது மகன் பிரசாந்த் மதல். இவர் அரசு அதிகாரி ஆவார். இவர் பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் (BWSSB)தலைமை கணக்காளராக பணியாற்றி வருகிறார்.

ரூ.81 லட்சம் லஞ்சமாக கேட்பு
இந்நிலையில் தான் மதல் விருபாக்சப்பா தலைவராக உள்ள கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட்டின் Raw Material டெண்டரை குத்தகைதாரர் ஒருவர் எடுக்க முயன்றார். இதற்கு ரூ.81 லட்சம் லஞ்சம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் குத்தகைதாரர் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. இதனால் லோக்ஆயுக்தாவில் புகார் தெரிவித்தார்.

எம்எல்ஏ மகன் கைது
இந்த புகாரை தொடர்ந்து லோக் ஆயுக்தா அதிகாரிகளின் ஆலோசனைப்படி நேற்று ரூ.40 லட்சத்தை குத்தகைதாரர் வழங்கினார். பாஜக எம்எல்ஏ மதல் விருபாக்சப்பாவின் மகன் பிரசாந்த் மதல் பணத்தை பெற்று கொண்டார். அப்போது அங்கு இருந்த லோக் ஆயுக்தா அதிகாரிகள் அவரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ.7.70 கோடி பறிமுதல்
இதையடுத்து பிரசாந்த் மதலின் அலுவலகத்தில் அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது கணக்கில் இல்லாத ரூ.1.70 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பெங்களூர் கிரிசென்ட் ரோட்டில் உள்ள மதல் விருபாக்சப்பாவின் அலுவலகத்தல் அதிரடியாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின்போது மொத்தம் ரூ.6 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து லஞ்சம் பணம் ரூ.40 லட்சம் தவிர மொத்தம் ரூ.7.70 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

எம்எல்ஏவுக்கு சம்மன்?
மேலும் கர்நாடக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பிரசாந்த் மதல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் பாஜக எம்எல்ஏவான மதல் விருபாக்சப்பாவிடமும் லோக்ஆயுக்தா விசாரிக்கலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவருக்கு விரைவில் சம்மன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே கர்நாடகா பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ள நிலையில் இந்த சம்பவம் அக்கட்சிக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications