நாளை இப்படி நடந்தால் பெரும் சிக்கல்.. சுதாரித்த எடியூரப்பா.. ஓட்டலில் பாஜக எம்எல்ஏக்கள்
பெங்களூரு: கர்நாடகா சட்டசபையில் நாளை எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று பெங்களூருவில் உள்ள ஒட்டலில் நடந்தது.
கர்நாடகாவில் கடந்த வாரம் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் ஆட்சி சட்ட்சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் கவிழ்ந்தது. இதனால் கர்நாடகா முதல்வராக பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.
இந்நிலையில் நாளை காலை 10 மணிக்கு கர்நாடகா சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கப்போவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

உறுப்பினர்களின் எண்ணிக்கை
தற்போது பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கு 99 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. தற்போதையை நிலையில் 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதால் அவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 207 ஆக குறைந்துள்ளது.

பெரும்பான்மையை நிரூபிக்க
இதனால் 104 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தாலே எடியூரப்பாவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்ற நிலையில் தற்போது 105 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

சட்டசபைக்கு வராமல்
இந்நிலையில் நூலிழை மெஜாரிட்டியில் இருப்பதால் பாஜகவும் எம்எல்ஏக்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது நாளை எதிர்பாராதவிதமாக சில எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வராமல் போன அது எடியூரப்பா அரசுக்கு சிக்கலை ஏற்படுத்திவிடும்.

பெங்களூருவில் கூட்டம்
இதன் காரணமாக கர்நாடகா பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தை எடியூரப்பா இன்று கூட்டியுள்ளார் பெங்களூருவில் உள்ள சான்சேரி பாவிலியான் ஓட்டலில் நடந்த கூட்டத்தில் பாஜக எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் 105 எம்எல்ஏக்களும் பங்கேற்றதாக கூறப்படுகிறது. நாளை பெரும்பான்மையை நிரூபிப்பது தொடர்பாக எடியூரப்பா இவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் நூலிழை மொஜரிட்டி என்பதால் இவர்களை அப்படியே பாதுகாப்பாக நாளை சட்டசபையில் பங்கேற்க வேண்டிய கட்டாயத்தில் எடியூரப்பா உள்ளார். இதனால் அனைவரையும் ஓட்டலுக்கு வரவழைத்துள்ளார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட்












Click it and Unblock the Notifications