சர்ச்சை போஸ்ட்.. கர்நாடகாவின் பாஜகவின் சமூக வலைதள கன்வீனர் கைது.. அடுத்தது ஜேபி நட்டாவா? பரபரப்பு
பெங்களூர்: கர்நாடகா பாஜகவின் ஐடி விங்க் கன்வீனர் பிரசாந்த் மகனூரை போலீசார் கைது செய்தனர். கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் சர்ச்சைக்குரிய போஸ்ட் பதிவிட்டது தொடர்பான வழக்கில் ஏற்கனவே பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் அமித் மாளவியாவுக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அடுத்து அவர்களை போலீசார் கைது செய்கின்றனரா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில் 2 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. அதன்படி கடந்த மாதம் 26ம் தேதி மற்றும் கடந்த 7 ம் தேதி என தலா 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது.

தேர்தல் வேளையில் கர்நாடகா பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அனிமேஷன் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில், ‛‛காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியி்ல எஸ்சி, எஸ்டி மற்றும் ஒபிசி பிரிவினருக்கான நிதி, சொத்துகளை இஸ்லாமியர்களுக்கு வழங்கவதாக கூறி உள்ளது'' என்பதை குறிக்கும் வகையிலான காட்சிகள் இருந்தன.
இதுதொடர்பாக காங்கிரஸ் சார்பில் கர்நாடகா காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டது. இந்த புகார் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து பெங்களூர் ஹைகிரவுண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தான் கர்நாடகா சமூக வலைதள பிரிவு கன்வீனர் பிரசாந்த் மகனூரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதன்பிறகு அவர் போலீஸ் நிலையத்தின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவுரையின்படி அந்த கட்சியின் ஐடி விங்க் பொறுப்பாளர் அமித் மாளவியா இந்த அனிமேஷன் வீடியோ வெளியிடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, அமித் மாளவியா உள்ளிட்டோருக்கு ஹைகிரவுண்ட் போலீசார் சம்மன் அனுப்பினர்.
அதில் ‛‛சம்மன் கையில் கிடைத்த 7 நாட்களில் காலை 11 மணிக்கு ஹைகிரவுண்ட் போலீஸ் நிலைய விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் அடுத்ததாக ஜேபி நட்டா கைது செய்யப்படுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் ஜாக்பாட்! முழு அதிரடி பலன்கள் இதோ -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications