Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்ச்சை போஸ்ட்.. கர்நாடகாவின் பாஜகவின் சமூக வலைதள கன்வீனர் கைது.. அடுத்தது ஜேபி நட்டாவா? பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா பாஜகவின் ஐடி விங்க் கன்வீனர் பிரசாந்த் மகனூரை போலீசார் கைது செய்தனர். கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் சர்ச்சைக்குரிய போஸ்ட் பதிவிட்டது தொடர்பான வழக்கில் ஏற்கனவே பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் அமித் மாளவியாவுக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அடுத்து அவர்களை போலீசார் கைது செய்கின்றனரா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில் 2 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. அதன்படி கடந்த மாதம் 26ம் தேதி மற்றும் கடந்த 7 ம் தேதி என தலா 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது.

Karnataka BJP Social Media Convenor arrested over an objectionable post in X page

தேர்தல் வேளையில் கர்நாடகா பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அனிமேஷன் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில், ‛‛காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியி்ல எஸ்சி, எஸ்டி மற்றும் ஒபிசி பிரிவினருக்கான நிதி, சொத்துகளை இஸ்லாமியர்களுக்கு வழங்கவதாக கூறி உள்ளது'' என்பதை குறிக்கும் வகையிலான காட்சிகள் இருந்தன.

இதுதொடர்பாக காங்கிரஸ் சார்பில் கர்நாடகா காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டது. இந்த புகார் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து பெங்களூர் ஹைகிரவுண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தான் கர்நாடகா சமூக வலைதள பிரிவு கன்வீனர் பிரசாந்த் மகனூரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதன்பிறகு அவர் போலீஸ் நிலையத்தின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவுரையின்படி அந்த கட்சியின் ஐடி விங்க் பொறுப்பாளர் அமித் மாளவியா இந்த அனிமேஷன் வீடியோ வெளியிடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, அமித் மாளவியா உள்ளிட்டோருக்கு ஹைகிரவுண்ட் போலீசார் சம்மன் அனுப்பினர்.

அதில் ‛‛சம்மன் கையில் கிடைத்த 7 நாட்களில் காலை 11 மணிக்கு ஹைகிரவுண்ட் போலீஸ் நிலைய விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் அடுத்ததாக ஜேபி நட்டா கைது செய்யப்படுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+