Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரிசி தர மறுத்த மத்திய அரசுக்கு சித்தராமையா "வேற மாதிரி" பதிலடி.. மக்கள் ஹேப்பி!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் மத்திய அரசு மறுத்ததால் இலவச அரிசி திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அரிசிக்கு பதிலாக பதிலடியாக ஒரு திட்டத்தை கையில் எடுத்துள்ளது சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு.

கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் பொறுப்பேற்றனர். கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற அக்கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதியும் பிரதானமாக கருதப்பட்டது. இதனால் காங்கிரஸ் ஆட்சி அமைந்தததும் மகளிருக்கு இலவச பயணம், 200 யூனிட் வரை இலவச மின்சாரம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றியது.

அந்த வரிசையில் கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தால் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. இந்த திட்டத்தை ஜூலை 1-ம் தேதி தொடங்குவதாக சித்தராமையா கூறினார். இந்த திட்டத்தை நிறைவேற்ற தேவையான கூடுதல் அரிசியை வழங்குமாறு இந்திய உணவு கழகத்துக்கு சித்தராமையா கடிதம் எழுதினார்.

Karnataka govt decide to give Money for BPL card holders instead of rice

இதற்கு முதலில் சம்மதம் தெரிவித்த உணவு கழகம் பின்னர் வெளிச் சந்தையில் அரிசி வழங்குவதை நிறுத்துவதாக கூறியது. இது கர்நாடகாவில் ஆளும் சித்தாரமையா அரசுக்கு அதிருப்தியை அளித்தது. பஞ்சாப், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து அரிசியை கொள்முதல் செய்யவும் சித்தராமையா பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதிலும் சாதகமான முடிவு எட்டவில்லை. தற்போது கர்நாடகாவில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு 5 கிலோ இலவச அரிசி ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, மீதம் வழங்க வேண்டிய 5 கிலோ இலவச அரிசிக்குப் பதிலாக பணமாக வழங்க முடிவு கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. ஒரு கிலோவிற்கு 34 ரூபாய் வீதம், 170 ரூபாய் வழங்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. வரும் ஜூலை 1ம் தேதி முதல் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள கர்நாடக அரசு இது தற்காலிக ஏற்பாடு மட்டுமே எனவும் தெரிவித்துள்ளது.

கர்நாடக உள்துறை அமைச்சர் முனியப்பா இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- அரிசி கொள்முதல் செய்ய பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொண்டோம். ஆனால், அரிசியை பெற முடியவில்லை. எனவே எங்கள் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில, மாற்று தீர்வை நாங்கள் கையாண்டுள்ளோம். எனினும், மக்களுக்காக ரொக்கமாக அளிப்பதால் ஏற்படும் நிதி சிக்கல்கள் குறித்து நாங்கள் கணக்கெடுக்கவில்லை" என்றார்.

கர்நாடகாவில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தான் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கர்நாடாக சட்டம் மற்றும் பார்லிமென்ட்ரி விவகாரங்கள் துறை அமைச்சர் எச்.கே பாடீல் கூறியதாவது:- இந்திய உணவு கழகம் மூலமாக மத்திய அரசு இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு வந்தது. அரிசி வினியோகம் சீராக கிடைக்கும் வரை ரொக்கமாக பணம் வழங்க முடிவு செய்துள்ளோம். மக்களுக்கு நேரடியாக வங்கியில் இந்த பணம் வரவு வைக்கப்படும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+