ஒற்றுமையாக இருக்கோம்..யார் முதுகிலும் குத்தமாட்டேன்..மிரட்ட மாட்டேன்...சொல்வது டி.கே சிவகுமார்
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்றும் முதல்வர் பதவி விசயத்தில் அதிருப்தியும் மன வருத்தமும் இருந்தாலும் முதுகில் குத்தமாட்டேன் என்றும் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் முதல்வர் அரியணையில் அமரப்போவது யார் என்பதில் சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் இடையே நீயா நானா போட்டி ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதியில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 66 இடங்களிலும், மஜத 19 இடங்களில் வெற்றி பெற்றன.

காங்கிரஸ் கட்சியில் முதல்வர் பதவிக்கான மல்லுக்கட்டு ஆரம்பித்து விட்டது. இந்த நிலையில் கர்நாடகாவின் முதல்வர் யார் என்பதை தேர்வு செய்வதற்காக நேற்று பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சுஷில்குமார் ஷிண்டே, தீபக் பவாரியா, பன்வார் ஜிதேந்திர சிங் தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
கர்நாடக முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை தலைமைக்கு வழங்கி கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே கர்நாடக முதல்வர் பதவிக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது.
இரு தலைவர்களின் ஆதரவாளர்களும் தங்கள் தலைவர்தான் அடுத்த முதல்வர் என்று போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். இது கர்நாடகாவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் எம்.எல்.ஏக்கள் அனுப்பி வைத்த தீர்மான அறிக்கையின் அடிப்படையில் யார் முதல்வர் என்று தேர்ந்தெடுக்கப்படும் ஆலோசனையில் காங்கிரஸ் தலைமை உள்ளது. இதனையடுத்து இருவரையும் சமாதானப்படுத்த காங்கிரஸ் தலைமை டெல்லிக்கு அழைத்தது.

கர்நாடகாவில் முதல்வர் அரியணை யாருக்கு என்ற போட்டிக்கு இடையே சித்தராமையா டெல்லி சென்றுள்ளார். அங்கு தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார். பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக நம்பிக்கையுடன் கூறியுள்ளார் சித்தராமையா. நேற்று தனது டெல்லி பயணத்தை ரத்து செய்தார் டி.கே. சிவகுமார்.
இதனிடையே கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே.சிவகுமார் இன்று டெல்லி சென்றுள்ளார். அங்கு சென்று மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை சந்தித்து பேசவிருப்பதாகவும் கூறப்படுகிறது. டெல்லி செல்லும் முன்பாக பெங்களூரு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், முதல்வர் பதவி விசயத்தில் தனக்கு மன வருத்தம் இருந்தாலும் தான் யார் முதுகிலும் குத்த மாட்டேன் என்றும் யாரையும் மிரட்டமாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 135 பேரும் ஒற்றுமையுடன் இருப்பதாகவும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அனைவரும் ஒற்றுமையுடன் பணி செய்து நிறைவேற்றுவோம் என்றும் டி.கே. சிவகுமார் கூறியுள்ளார். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மூன்று நாட்கள் முடிந்த நிலையிலும் முதல்வர் யார் என்பதில் சிக்கல் நீடிப்பதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications