ககன்யான் சோதனையில் நடந்தது என்ன? எப்படி சரி செய்யப்பட்டது.. இஸ்ரோ தலைவர் விளக்கம்
பெங்களூர்: ககன்யான் சோதனையின் போது முதலில் ஏற்பட்ட பிரச்சினை என்ன? என்பது குறித்தும் அது எவ்வாறு சரி செய்யப்பட்டது என்பது குறித்தும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கம் அளித்துள்ளார்.
விண்வெளி துறையில் இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. நிலவின் தென் துருவத்தில் வேறு எந்த நாடும் இதுவரை ஆய்வு செய்யாத நிலையில், அங்கு ரோவரை அனுப்பி இந்தியா ஆய்வு மேற்கொண்டது. இந்தியாவின் இந்த சாதனை உலகையே திரும்பி பார்க்க வைத்தது. இஸ்ரோவின் கனவு திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் வரும் 2025 ஆம் ஆண்டு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக மூன்று கட்ட சோதனைகளை இஸ்ரோ நடத்த இருக்கிறது. அதன்படி, முதல் கட்ட சோதனையாக முதல் ஆளில்லா டிவி-டி1 ராக்கெட் இன்று காலை 8 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்து இருந்தது. இதற்கான இறுதி கட்ட பணிகள் நிறைவடைந்து கவுன்டவுன் நேற்று தொடங்கியிருந்தது. இன்று காலை 8 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய இருந்த நிலையில் வெறும் 5 விநாடிகளுக்கு முன்பு கவுண்ட் டவுன் நிறுத்தப்பட்டு சோதனை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் சிறிது நேரத்தில் பிரச்னைகள் சரி செய்யப்பட்டு ககன்யான் கலன் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. வெறும் 30 நிமிடங்களில் தொழில்நுட்ப பிரச்னைகள் சரி செய்யப்பட்டு தற்போது மாதிரி கலனை (Crew Module) ஏந்திக்கொண்டு TV-D1 ராக்கெட் விண்ணில் பறந்தது. பூமியிலிருந்து புறப்பட்ட டிவி-டி1 ராக்கெட் 8 நிமிடங்களில் திட்டமிட்ட 17.6 கிலோமீட்டர் என்ற இலக்கை அடைந்தது.

அதன் தொடர்ச்சியாக ராக்கெட்டில் பொருத்தப்பட்டு இருந்த மனிதர்கள் அமரும் பகுதி தனியாக பிரிந்தது. பின்னர் அதில் இணைகப்பட்ட மூன்று பிரம்மாண்ட பாராசூட்டுகள் மூலம் வங்கக்கடலில் பாதுகாப்பாக இறங்கியது. இதன்படி, ககன்கயான் திட்டத்தின் முதற்கட்ட சோதனை திட்டமிட்டப்படி வெற்றி பெற்றது. வங்கக்கடலில் இறங்கிய விண்கலத்தின் மனிதர்கள் இறங்கும் கலனை, இன்று மாலைக்குள் சென்னை துறமுகத்திற்கு கடற்படையினரால் மீட்டு கொண்டு வரப்பட உள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இது குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது:- TV-D1 திட்டம் வெற்றி பெற்றதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். இணக்கமற்ற சூழலை கம்ப்யூட்டர் மூலம் கண்டறியப்பட்டதால் முதலில் விண்ணில் ஏவுவது நிறுத்தப்பட்டது. அதை கண்டுபிடித்து உடனடியாக சரி செய்தோம். ஒலியின் வேகத்தை விட சற்று கூடுதலாக ககன்யான் திட்டத்தில் உள்ள வாகனம் பயணித்தது. ககன்யான் சோதனை திட்டத்தின் அனைத்து நிலைகளும் வெற்றி பெற்றுள்ளது. பணிக்குழு கலன் கடலில் இருந்து மீட்கப்பட்டது குறித்து கூடுதல் தகவல்கள் மற்றும் ஆய்வுகள் குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்கிறோம்" என்றார்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications