வாட்ஸ் அப்பில் வந்த போட்டோ.. கோபத்தில் திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை!
வாட்ஸ் அப் புகைப்படத்தால் கர்நாடகாவில் நடக்கவிருந்த திருமணம் ரத்து செய்யப்பட்டது.
Recommended Video

பெங்களூரு: வாட்ஸ் அப்பில் வந்த புகைப்படத்தால் அதிர்ச்சி அடைந்த மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் சேக்லேஷ்பூரைச் சேர்ந்தவர் தாரேஷ். இவருக்கும் ஸ்ருதி என்பவருக்கும் பெரியவர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமண நாளன்று திருமணம் நடைபெற சில மணி நேரங்களே இருந்த நிலையில், தாரேஷுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு புகைப்படம் வந்தது. அதில், மணமகள் ஸ்ருதி வேறொரு ஆணுடன் நெருக்கமாக இருப்பதைப் பார்த்து தாரேஷ் அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக இது தொடர்பாக மணமகள் வீட்டாரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது புகைப்படத்தில் இருப்பவர் பெயர் அபிலேஷ் என்றும், ஸ்ருதியும் அவரும் காதலித்து வருகின்றனர் என்பதும் தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த தாரேஷ் திருமணத்தை நிறுத்தினார். மணமகன் வீட்டார் அனைவரும் மண்டபத்தை விட்டு வெளியேறினர். இதனால் திருமண வீடு சோகத்தில் மூழ்கியது.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட பெண்ணின் அப்பா, அபிலேஷை மண்டபத்திற்கு வரவழைத்தார். பின்னர் குறிக்கப்பட்ட அதே முகூர்த்தத்தில் அபிலேஷுக்கும், ஸ்ருதிக்கும் அதே மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
தாரேஷுக்கு வாட்ஸ் அப்பில் ஸ்ருதி - அபிலேஷ் புகைப்படத்தை அனுப்பியது யார் என்பது குறித்து தெரியவில்லை.












Click it and Unblock the Notifications