சித்தராமையாவுக்கு மெகா சிக்கல்.. முடா விவகாரத்தில் அமலாக்க துறை வழக்குப்பதிவு! அடுத்து என்ன!
பெங்களூர்: முடா முறைகேடு குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது அமலாக்க துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
கர்நாடகாவில் மூடா எனப்படும் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் இருக்கிறது. இந்த வாரியம் அம்மாநில முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்ததாகவும் இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளன.

இந்த விவகாரத்தில் முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தத் தடையில்லை என்று கர்நாடக ஐகோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த வழக்கை லோக் அயுக்தா போலீஸ் விசாரித்து வரும் நிலையில், இப்போது அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது.
மைசூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா என்பவர் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் இப்போது கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
அமலாக்கத் துறையும் இப்போது வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications