சந்திரயான் 3: லேண்டர், பிரக்யான் விழித்தெழ வாய்ப்பு இருக்கா? இல்லையா? வெளியான புது தகவல்!
பெங்களூர்: நிலவில் சூரிய ஒளி பட தொடங்கியதால் பிரக்யான் ரோவர், விக்ரம் லேண்டர் விழித்தெழ வைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே, சந்திரயான் விண்கலம் மீண்டும் செயல்பட வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து இஸ்ரோ அதிகாரிகள் கூறிய தகவல் வெளியாகியுள்ளது.
நாம் வாழும் இந்த பூமியின் துணைக்கோளான நிலவில் என்னதான் இருக்கிறது... அங்கு மனிதர்கள் வாழ சாத்தியம் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நிலவு குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்த படியாக இந்தியா முன்னிலை வகிக்கிறது. சந்திரயான் திட்டங்களின் மூலம் நிலவு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, கடந்த 2008 ஆம் ஆண்டு விண்ணில் ஏவிய சந்திரயான் 1 விண்கலம் நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது.

நிலவு குறித்த ஆராய்ச்சியில் பெரும் திருப்பு முனையாக இது அமைந்தது. அதன்பிறகு சந்திரயான் 2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. இந்த திட்டம் லேசான சறுக்கலை சந்தித்தது. எனினும் இதில் இருந்து பாடம் கற்ற இஸ்ரோ, கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது. நிலவில் இதுவரை எந்த நாடும் ஆய்வு செய்யாத தென் துருவத்தை ஆய்வு செய்ய இந்த விண்கலத்தை இந்தியா அனுப்பியது.
ஆகஸ்ட் 17 ம் தேதி உந்துவிசை கலனில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் ‛சாப்ட் லேண்டிங்' முறையில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்மூலம் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தப்படியாக நிலவில் இறங்கிய 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. அதோடு தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற சாதனையை இந்தியா பெற்றது.
அதன்பிறகு விக்ரம் லேண்டரில் இருந்து திட்டமிட்டப்பட்டி பிரக்யான் ரோவர் நிலவில் தரையிறங்கியது. தொடர்ந்து 14 நாட்கள் நிலவின் சிவசக்தி பகுதியில் பிரக்யான் ரோவர் ஆய்வு செய்தது. 100 மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்ட ரோவர், நிலவில் உள்ள சல்பர் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை உறுதி செய்து. இதைத் தொடர்ந்து, நிலவில் இருள் சூழ்ந்தததால் விக்ரம் லேண்டர், ரோவர் கருவிகளின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
ஏனென்றால் நிலவில் இருள் என்பது 14 நாட்கள் தொடர்ந்து இருக்கும். இந்த சமயத்தில் குறைந்தபட்சம் -150 டிகிரி செல்சியஸ் முதல் -253 டிகிரி செல்சியஸ் வரை குளிர் இருக்கும். இதனால் சூரியஒளி கிடைக்காமல் லேண்டர், ரோவர் கருவிகள் செயல்பட முடியாதது. தற்போது நிலவில் மீண்டும் சூரியஒளி பட தொடங்கி உள்ளதால், அதை மீண்டும் விழித்தெழ வைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆனால் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை. சிக்னல் பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது வரை எந்த சிக்னலும் கிடைக்கவில்லை. இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத இஸ்ரோ அதிகாரி கூறுகையில், நிலவின் இரவு நேரத்தில் நிலவி கடுமையான தட்ப வெப்பநிலை காரணமாக பிரக்யான் ரோவர் மற்றும் லேண்டரை விழித்தெழ வைப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டதாக தெரிவித்தார்.
-
அமெரிக்காவின் ரகசிய ஆயுதம்.. இது தெரியாம விளையாட கூடாது! -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல்












Click it and Unblock the Notifications