Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Time to lead! ஒரே ட்வீட்டில் 2024 தேர்தலில் யாருக்கு எதிர்காலம்! புட்டுபுட்டு வைத்த பி.சி.ஸ்ரீராம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றது குறித்து ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் ட்வீட் போட்டிருக்கிறார்.

கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 111 இடங்களில் வென்றுள்ளது. பாஜக 54 இடங்களில் வென்றுள்ளது. மஜத 16 இடங்களில் வென்றுள்ளது.

P.C.Sreeram says that Secular Minds have woken up

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி 25 இடங்களில் முன்னிலையில் இருந்து வருவதால் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து ஆலோசனை நடத்த காங்கிரஸ் கட்சி சார்பில் வென்ற எம்எல்ஏக்கள் நாளை ஆலோசனை நடத்துகிறார்கள்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றதற்கு பலரும் ட்வீட் போட்டு வருகிறார்கள். கர்நாடகாவில் சர்வாதிகாரம் தோற்றது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அது போல் தமிழக முதல்வர் ஸ்டாலின் சோனியா காந்திக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அத்துடன் அவர் கர்நாடகாவில் மிகச் சிறப்பான வெற்றியை பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள்.

கர்நாடகா மக்கள் வாக்களித்த போது நியாயப்படுத்த முடியாத வகையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து பதவி நீக்கம் செய்தது நாட்டின் முதன்மை புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தவறாக பயன்படுத்தியது இந்தித் திணிப்பு, பெருமளவிலான ஊழல் என அனைத்தும் அவர்கள் மனதில் எதிரொலித்திருக்கிறது. பாஜகவின் பழிவாங்கும் அரசியலுக்கு தக்க பாடம் அவர்கள் தங்கள் கன்னடர்கள் கொடுத்துள்ளனர்.

திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது. அடுத்து 2024 ஆம் ஆண்டு பொது தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். இந்தியாவில் மக்களாட்சியையும் அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம்! என தெரிவித்துள்ளார். அது போல் திமுக எம்பி கனிமொழி கூறியிருப்பதாவது: இது ஒரு மாநிலத்திற்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, நாளை நாடு முழுவதும் நடைபெறவுள்ள மாற்றத்திற்கான வாக்குறுதியும் கூட என தெரிவித்துள்ளார்.

P.C.Sreeram says that Secular Minds have woken up

அது போல் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். இந்த நிலையில் சினிமா ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மதசார்பற்ற மக்கள் விழித்து கொண்டார்கள். தலைமையேற்க நேரம் வந்துவிட்டது என கூறியுள்ளார். அப்படியென்றால் மத்தியில் ஆளும் பாஜகவை வரும் 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பிவிட்டு மதசார்பறற கட்சியான காங்கிரஸ் தலைமையேற்க நேரம் வந்துவிட்டதாக அவர் கூறியுள்ளதாக புரிகிறது.

பி.சி. ஸ்ரீராம் சமூகம் சார்ந்த கருத்துகளை அவ்வப்போது வெளியிடுவார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை தமிழ்நாடு என குறிப்பிடாமல் தமிழகம் என குறிப்பிடுவதே சரியாக இருக்கும் என பேசியிருந்தார். இதற்கு பலதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அந்த வகையில் பி.சி. ஸ்ரீராம் கூறுகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல்வாதிபோல நடந்து கொள்கிறார். இந்த தேர்தலில் அவருடைய எஜமானர்கள் எப்படியாவது வெற்றி பெற வேண்டும். அதனால் அவரை பயம் பற்றிக் கொண்டிருக்கிறது. தற்போதைய யுத்தம் என்பது பிரிவினைவாதத்திற்கும், வெறுப்புப் பேச்சிற்கும் எதிரானது. ஆளுநர் பதவி விலக வேண்டும். அவரின் பேச்சு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+