பெங்களூர் சிறையில் பிரபல நடிகரின் காதலி பவித்ரா.. இனி தினமும் வீட்டு சாப்பாடு.. அதிரடி உத்தரவு
பெங்களூர்: சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி என்பவரது வழக்கில் நடிகர் தர்ஷன் மற்றும் அவரது தோழி பவித்ரா கவுடா உள்பட சம்பந்தப்பட்டவர்கள் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது வழக்கு விசாரணை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்நிலையில் நடிகை பவித்ரா கவுடா உள்பட 3 பேர் தினமும் ஒரு வேளை வீட்டு சாப்பிட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம், பெங்களூரு அருகே உள்ள ஒரு கால்வாயில் ரேணுகாசாமி (33) என்பவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், பிரபல கன்னட நடிகரான தர்ஷன் மற்றும் அவரது தோழி பவித்ரா கௌடா ஆகியோரின் தூண்டுதலின் பேரில் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

பவித்ரா கௌடாவிற்கும் தரிசனுக்கும் இடையே உள்ள உறவு குறித்து, ரேணுகாசாமி சமூக வலைதளங்களில் ஆபாசமான மற்றும் அவதூறான கருத்துக்களைப் பதிவிட்டு வந்தாராம். இதனால் ஆத்திரமடைந்த தர்ஷன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், சித்ரதுர்காவிலிருந்து ரேணுகாசாமியைக் கடத்தி வந்து, பெங்களூருவில் உள்ள ஒரு பட்டறையில் வைத்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் ரேணுகாசாமி உயிரிழந்தார்.
இந்த வழக்கின் விசாரணை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில் ரேணுகாசாமியின் தாயார் ரத்னபிரபா அளித்த வாக்குமூலம் முரணாக இருக்கிறது. பிறழ் சாட்சியாக மாறிவிட்டதாக கூறப்படுகிறது. அதை கோர்ட்டு ஏற்றுக் கொள்ளுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அடுத்த மாதம்(ஜனவரி) 5ந் தேதி அதுபற்றி முடிவு செய்யப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் சிறையில் உள்ள பவித்ரா கவுடா மற்றும் நாகராஜூ, லட்சுமணன் ஆகியோர் தாங்கள் வீட்டு உணவை சாப்பிட அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி அவர்களது கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் தினமும் இரவு ஒரு வேளை மட்டும் வீட்டில் சமைத்த உணவை வழங்க அனுமதித்துள்ளனர்.
நடிகர் தர்ஷனும் ரேணுகாசாமியை கொலை செய்த வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதற்கிடையே பெங்களூர் சிறையில் கைதிகள் மதுகுடித்துவிட்டு நடனமாடி கும்மாளமிடுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியதால் கடந்த டிசம்பரில் சிறையில் முறைகேடுகளை தடுக்க அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதில், தர்ஷனுக்கு வழங்கப்பட்ட சில சலுகைகளும் அப்போது பறிக்கப்பட்டது. தர்ஷன் பாரக் கட்டிடத்தில் இருந்தே உணவு சாப்பிட்டு வந்தார். மேலும், நடைபயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார். தற்போது அந்த சலுகைகள் பறிக்கப்பட்டிருக்கிறது. தர்ஷனுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. அவர் சிறையில் தான் இருந்து வருகிறார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications