மக்களை சந்தித்து பிரசாரம் செய்யும் என்னை சில கோழைகள் தடுத்து நிறுத்துகிறார்கள்- பிரகாஷ்ராஜ்
Recommended Video

பெங்களூர்: மக்களை சந்திக்கும் பிரசாரத்தில் என்னை சில கோழைகள் தடுத்து நிறுத்துகிறார்கள் என பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்.
எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் வலது சாரிகளுக்கு தொடர்பிருப்பதாக மிகவும் தைரியமாக குற்றச்சாட்டை முன்வைத்தவர் பிரகாஷ்ராஜ். அத்தோடு பாஜகவுக்கு எதிராக விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் பெங்களூர் மத்திய தொகுதியில் தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதுவும் சுயேச்சையாக போட்டியிட போவதாகவும் ஜனவரி 1-ஆம் தேதி அறிவித்தார்.

தேர்தல் பிரசாரம்
இதில் #citizensvoice in parliament என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி அவர் தனது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். மேலும் அவர் கூறிய பெங்களூர் மத்திய தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

குறைகள்
இதற்காக 4 ஆட்டோக்கள் மூலம் 8 பேர் கொண்ட குழுக்களை உருவாக்கியுள்ளார். அந்த குழுவினர் அந்த தொகுதியில் உள்ள மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிவர்.

பிரசாரம் தொடக்கம்
அவ்வாறு முன்கூட்டியே மக்களது பிரச்சினைகளை தெரிந்து கொண்டால் மட்டுமே தேர்தல் அறிக்கையை தயார் செய்ய முடியும் என தெரிவித்திருந்தார் பிரகாஷ்ராஜ். இந்த நிலையில் அவர் தனது பிரசாரத்தையும் தொடங்கியுள்ளார்.
|
அரசியல் கட்சிகள்
பிரகாஷ் ராஜ் தொகுதி மக்களை சந்திக்க விடாமல் சிலர் செய்வதாக டுவிட்டரில் பிரகாஷ் ராஜ் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில் சாந்தினி நகரில் பிரசாரத்தை தொடங்கிய தங்களை சில அரசியல் கட்சிகள் தடுத்தனர்.

குரல் ஒலிப்பது
எங்களது பயணத்தால் எந்த அளவுக்கு அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர் என்பதையே இது காட்டுகிறது. இதுதொடர்பாக காவல் துறை ஆணையரிடம் பேசி தீர்வு கண்டுள்ளோம். நாடாளுமன்றத்தில் மக்களின் குரல் ஒலிப்பதை உறுதி செய்யும் வகையில் தங்களின் பயணம் நாளை முதல் (இன்று முதல்) தீவிரமாகும் என்றார் பிரகாஷ் ராஜ்.












Click it and Unblock the Notifications