சசிகலாவிற்கு எத்தனை நாள் சிகிச்சை... என்னென்ன மருந்துகள் தரப்படுகிறது தெரியுமா?
பத்தில் இருந்து பதினைந்து நாட்கள் மருத்துவமனையில், சசிகலா சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என விக்டோரியா மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். சசிகலாவிற்கு ரெம்டெசிவர், ஸ்டீராய்டு, இன்சுலி
பெங்களூரு: சசிகலாவிற்கு நுரையீரல் பாதிப்பு இருப்பதால் அவர் 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என்று விக்டோரியா மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா கூறியுள்ளார்.
சொத்துகுவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலா, இம்மாதம் 27 ஆம் தேதி விடுதலை ஆக இருந்தார்.
Recommended Video

சசிகலாவிற்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் பெங்களூரு பௌரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சசிகலாவிற்கு என்ன பாதிப்பு
சசிகலாவிற்கு நேற்றிரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று காலையில் விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், சசிகலா அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் நல பாதிப்பு
சசிகலாவிற்கு ரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு போன்ற பிரச்சினைகளும் உள்ளன. சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் அளவு 95 இருப்பதாகவும்

தொடர் கண்காணிப்பு
இந்த நிலையில் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா அளித்துள்ள பேட்டியில், சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக கூறினார். சசிகலாவை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்று கூறினார்.

15 நாட்கள் சிகிச்சை
சசிகலாவிற்கு தற்போது காய்ச்சல் இல்லை. நுரையீரல் பாதிப்பால் இன்னும் 4 அல்லது 5 நாட்களுக்கு மூச்சு திணறல் இருக்கும் என்று கூறினார். சசிகலா 10ல் இருந்து 15 நாட்கள் வரையில், விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார்.

கொடுக்கப்படும் மருந்துகள்
சசிகலாவிற்கு ரெம்டெசிவர், ஸ்டீராய்டு, இன்சுலின் மருந்துகள் தரப்படுகின்றன. சசிகலாவிற்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஹைபோதைராடிசம் நோய்கள் உள்ளதாகவும் கூறினார்.

சகல வசதிகளும் உள்ளன
சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றவேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்ட ரமேஷ் கிருஷ்ணா, அனைத்து வசதிகளும் விக்டோரியா மருத்துவமனையில் இருப்பதாகத் தெரிவித்தார். இதனிடையே சசிகலாவின் உடல்நிலை பாதிப்பு அவருடைய உறவினர்களை கவலையடையச் செய்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications