அரசு, தனியார் நிறுவன வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு கோரி கர்நாடகாவில் நாளை பந்த்
பெங்களூரு: அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி கன்னட சங்கங்கள் நாளை முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று சரோஜினி மகிஷி அறிக்கை 1984-ல் பரிந்துரைத்தது. பல ஆண்டுகளாக இப்பரிந்துரைகள் கிடப்பில் இருக்கின்றன என்பது கன்னட சங்கங்களின் குற்றச்சாட்டு.

சரோஜினி மகிஷி அறிக்கையின் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி கன்னட அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் அடுத்த கட்டமாக தங்களது கோரிக்கையை வலியுறுத்தி நாளை கர்நாடகா தழுவிய முழு அடைப்புக்கு பல்வேறு கன்னட சங்கங்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.
நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்துக்கு பல்வேறு தொழிலாளர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. கர்நாடகா போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்பது தொடர்பாகவும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. கர்நாடகா மாநில அரசும் இது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications