சத்துணவு பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை வழக்கு.. தலைமறைவான பாஜக மாவட்ட செயலாளர் கர்நாடகாவில் கைது
பெங்களூர்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பள்ளிக்கூட சமையல் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த பாஜக மேற்கு மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரனை கர்நாடகாவில் இன்று போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரத்தில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில், 30 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு சமையல் செய்வதற்காக சத்துணவு பெண் பணியாளர் பணியாற்றி வந்தார்.

வழக்கம் போல் அவர் பள்ளியில் சமையல் வேலை செய்வதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது வரும் வழியில், புஷ்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணியின் கணவரும், பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளருமான மகுடீஸ்வரன் அந்த பெண்ணை வழிமறித்தார். மேலும், சமையல் கணக்கு வழக்கை பார்க்க வேண்டும் என்று சொல்லி அவரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றார்.
தொடர்ந்து அந்த பெண் ஊழியர் சமையல் கூடத்தில் பொருட்களை எடுத்து காண்பித்தார். அப்போது மகுடீஸ்வரன் அந்த பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் பதறிப்போன் பெண் ஊழியர், அங்கிருந்து வெளியே ஓடிச்சென்றார். தொடர்ந்து இது குறித்து சாமிநாதபுரம் போலீசில் அந்த பெண் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து திண்டுக்கல் பாஜக மேற்கு மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் மீது மானபங்கம் செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்ததும் மகுடீஸ்வரன் தலைமறைவானார். தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில், மகுடீஸ்வரன் கர்நாடகாவில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற தனிப்படை போலீசார் மகுடீஸ்வரனை கைது செய்தனர். தொடர்ந்து அவரை திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, மகுடீஸ்வரன் வகித்து வந்த திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர், ஒன்றிய பார்வையாளர் பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக திண்டுக்கல் மாவட்ட பாஜக தலைவர் பழனி கனகராஜ் அறிவித்து இருந்தார். இதேபோல், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவரை நீக்குவதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பரிந்துரை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்!











Click it and Unblock the Notifications