Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடியரசு தினவிழாவில் கர்நாடக அலங்கார ஊர்தி நிராகரிப்பு! கன்னடர்களுக்கு அவமானம்! சித்தராமையா கொதிப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: குடியரசு தின விழா அணிவகுப்பில் கர்நாடக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சித்தராமையா, கன்னட மக்களை மத்திய அரசு அவமதித்துவிட்டதாக கூறியுள்ளார்.

டெல்லியில் வரும் 26 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மூவர்ணக் கொடியை ஏற்றுகிறார். குடியரசு தினவிழாவில் அணிவகுப்பு நடைபெற உள்ளது. இந்த அணிவகுப்பில் ஒவ்வொரு மாநிலங்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, அந்த மாநில அலங்கார ஊர்திகள் இடம் பெற்று வருகின்றன.

இந்த நிலையில், குடியரசு தின விழாவில் கர்நாடக மாநில அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு சார்பில், பெங்களூரு சர்வதேச விமான நிலைய மாதிரி மற்றும் பெங்களூரு நகர தெய்வமான அன்னம்மா தேவியின் சிலையுடன் அலங்கார ஊர்தி அமைக்க அனுமதி கோரப்பட்டு இருந்தது. ஆனால் கர்நாடக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

siddaramaiah-slams-central-government-on-no-karnataka-tableau-at-republic-day-parade

அலங்கார ஊர்தி:அணிவகுப்பில் இந்த ஆண்டு கர்நாடக அரசின் அலங்கார ஊர்தி இடம் பெற அனுமதி இல்லை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் , மாநிலங்கள் சார்பில் காட்சிக்கு வைக்கப்படும பொருட்களில், கர்நாடக அரசின் அலங்கார ஊர்தியை வைத்து கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதால், இந்த முறை கர்நாடகத்திற்கு வாய்ப்பு அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் கர்நாடக அரசின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி வழங்க முதலில் மறுப்பு தெரிவித்தது.

கடும் கண்டனம்: பிறகு கர்நாடகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியதால் சிறப்பு அனுமதியை கொடுத்திருந்தது. அதன்படி, கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் கர்நாடக அரசின் அலங்கார ஊர்தியும் பங்கேற்று கவுரவிக்கப்பட்டு இருந்தது. இத்தகைய சூழலில் இந்த ஆண்டு கர்நாடக அரசின் ஊர்திக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பது அம்மாநில அரசியலில் விவாதப்பொருளாகியுள்ளது.

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம், உலக அளவில் 3-வது சிறந்த விமான நிலையம் என்ற சிறப்பை பெற்றிருக்கிறது. கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு பல விருதுகளும் கிடைத்திருக்கிறது. அப்படி இருந்தும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் பெங்களூரு விமான நிலைய மாதிரியுடன் கூடிய அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்திருப்பதற்கு, கன்னட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் ஆட்சி நடப்பதால் தான்: கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சித்தராமையா கூறுகையில், மாநில அரசின் வாய்ப்பை மத்திய அரசு மறுக்கிறது. காங்கிரஸ் ஆட்சி இருப்பதால்தான் இது நடைபெறுகிறது. கர்நாடாவின் அலங்கார ஊர்தியை மறுத்ததன் மூலம் 7 கோடி கன்னட மக்களையும் மத்திய அரசு இழிவுபடுத்திவிட்டது" என்று சித்தரமையா சாடியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+