”கர்நாடகாவில் காவி மயமாக்கப்பட்ட பள்ளி பாடபுத்தங்கள்” - திரும்பப்பெற சித்தராமையா வலியுறுத்தல்
பெங்களூரு: கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை போதிக்கும் காவிமயமாக்கப்பட்ட பாடபுத்தகங்களை திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும் அம்மாநில முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா வலியுறுத்தி இருக்கிறார்.
கர்நாடக கல்வி நிலையங்களில் மதம் சார்ந்த அடையாளங்கள் இருக்கக்கூடாது என்று இஸ்லாமிய மாணவிகள் அணிந்து வரக்கூடிய ஹிஜாபுக்கு அம்மாநில அரசு தடை விதித்தது.
இந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சமூக அறிவியல் மற்றும் மொழி பாடபுத்தகங்களில் உள்ள பாடங்களை திருத்தம் செய்ய ரோகித் சக்ரதிர்தா என்பவர் தலைமையில் கர்நாடக அரசு குழு அமைத்தது.

பெரியார், திப்பு சுல்தான் பாடங்கள் நீக்கம்
இந்த புதிய குழு, வரும் கல்வியாண்டுக்கான மொழி மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகங்களில் மைசூர் மன்னர் திப்பு சுல்தான் போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள், தந்தை பெரியார், நாராயண குழு உள்ளிட்ட சீர்திருத்தவாதிகள், முற்போக்கு கருத்து கொண்ட தலைவர்கள் குறித்த பாடங்கள் அகற்றியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஆர்.எஸ்.எஸ். பாடங்கள்
அதற்கு மாற்றாக ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களையும், மதவெறியையும் போதிக்கூடிய பாடங்கள் புதிய புத்தகங்களில் சேர்க்கப்பட்டு இருப்பதாக சர்ச்சை கிளம்பியது. குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் கேஷவ் பலிராம் ஹேட்கேவரின் பேச்சுக்கள் கர்நாடக அரசு வெளியிட்டு இருக்கும் பள்ளி பாட புத்தகங்களில் இடம் இருப்பதாக புகார்கள் குவிந்தன.

குழு கலைப்பு
இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வெளியிட்டு உள்ள அறிக்கையில், பாடநூல்களை வடிவமைத்த குழுவை கலைப்பதாக அறிவித்தார். பாடநூல் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்து விட்டதாக இந்த முடிவை எடுப்பதாக கூறினார். புத்தகங்கள் ஏதேனும் திருத்தம் தேவைப்பட்டால் அதை அரசாங்கமே மேற்கொள்ளும் என உறுதியளித்தார்.

சித்தராமையா விமர்சனம்
கர்நாடக முதலமைச்சரின் இந்த அறிவிப்பை முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா விமர்சித்து இருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், "திரும்பப்பெற வேண்டியது பாடபுத்தகங்களைதானே தவிர, பாட புத்தகங்களை தயாரித்த குழுவை அல்ல. அவர்கள் தங்களின் நோக்கத்தை ஏற்கனவே நிறைவேற்றிவிட்டனர்.

கடும் எதிர்ப்பு
அதன் தலைவரை நீக்கிவிட்டால், அவர் தலைமையிலான குழு தயாரித்த புத்தகங்களை மட்டும் எப்படி நம்மால் ஏற்க முடியும்? என அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி எழுத்தாளர்கள், லிங்காயத் தலைவர்கள், கல்வியாளர்கள் பலரும் பாடபுத்தகங்களை காவிமயமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications