மத்திய அமைச்சர் குமாரசாமிக்கு சிக்கல்.. ஐகோர்ட்டை தொடர்ந்து உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது
பெங்களூர்: மத்திய கனரக தொழில்கள் அமைச்சர் குமாரசாமி, கடந்த 2007ல் முதலமைச்சராக இருந்தபோது விதிகளை மீறி நிலம் வாங்கியதாக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விசாரணையை ரத்து செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார். இந்நிலையில் குமாரசாமிக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணையை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி தற்போது மத்திய கனரக தொழில்கள் அமைச்சராக உள்ளார். இவர் 2007ம் ஆண்டு பெங்களூர் தெற்கு தாலுகாவின் உத்தரஹள்ளி ஹோபியில் உள்ள ஹலகேவதேரஹள்ளி கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான இரண்டு நிலங்கள் முதல்வராக இருந்த குமாரசாமியின் உத்தரவு காரணமாக வகைப்பாடு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி 2010ம் ஆண்டு முறைகேடாக தனியாருக்கு ரூ.4.14 கோடிக்கு விற்கப்பட்டது என்று புகார் எழுந்தது. இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் குமாரசாமி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.. இதையடுத்து ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி மத்திய கனரக தொழில்கள் அமைச்சர் குமாரசாமி மனு தாக்கல் செய்தார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ராஜேஷ் பிண்டால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, குமாரசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஊழல் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டதைக் கருத்தில் கொண்டு, குமாரசாமி மீது வழக்குத் தொடர அனுமதி தேவை என்று வாதிட்டார் மேலும் அதன்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறினார். அனுமதி பெறாமல், விசாரணை மேற்கொள்ளப்படக்கூடாது, மேலும் அவரது மனுவை நிராகரித்ததில் உயர் நீதிமன்றம் தவறு செய்துள்ளது என்றும் குமாரசாமியின் வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால் மத்திய அமைச்சர் எச்.டி. குமாரசாமி மீதான ஊழல் வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உயர்நீதிமன்றமும் நடவடிக்கைகளை ரத்து செய்ய மறுத்துவிட்டது. இந்த முறை, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நான்கு ஆண்டுகள் பழமையான உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மறுத்து விட்டது. இதையடுத்து தற்போது மத்திய அமைச்சர் குமாரசாமி வழக்கை எதிர் கொண்டு தான் ஆக வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications