Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

”இது டூ மச்” நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக கொந்தளித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா நபிகள் நாயகம் மீது தெரிவித்த அவதூறு கருத்து சர்வதேச பிரச்சனையாகியுள்ள நிலையில், அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என சீனா அறிவுறுத்தி இருக்கிறது.

சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் புகழ்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அதில் பேசிய நுபுர் ஷர்மா இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசினார். அதேபோல் அக்கட்சியின் நவீன் குமார் ஜிண்டாலும் முஹம்மது நபி குறித்து ட்விட்டரில் அவதூறாக கருத்திட்டார்.

வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு

நுபுர் ஷர்மாவின் இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. மும்பையில் நுபுர் ஷர்மா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் மும்பை போலீஸ் திட்டமிட்டு இருக்கிறது. இதேபோல் டெல்லி போலீசும் நுபுர் சர்மா மீது வழக்குப்பதிவு செய்து இருக்கிறது.

புல்டோசர்

புல்டோசர்

இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நுபுர் ஷர்மாவின் பேச்சை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர். பலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை நுபுர் ஷர்மாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி காவல்துறை கைது செய்தது. அத்துடன் போராட்டத்தை ஈடுபட்ட இஸ்லாமியர்களின் வீடுகள் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டதாக கூறி அவற்றை புல்டோசர் கொண்டு இடித்து தள்ளியது அம்மாநில அரசு

உலக நாடுகள் எதிர்ப்பு

உலக நாடுகள் எதிர்ப்பு

நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குறிய பேச்சு அரபு நாடுகளிலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சவூதி அரேபியா, ஈரான் அமீரகம், குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நாடுகள், இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஆகிய இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும், பாஜக பிரமுகரின் பேச்சுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #Boycott India என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

வெங்கடேஷ் பிரசாத்

வெங்கடேஷ் பிரசாத்

இந்த நிலையில். நபிகள் நாயகத்தை அவதூறாக பேசிய நுபுர் ஷர்மாவின் பொம்மை கர்நாடகாவில் உள்ள மின்சார வயரில் தொங்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத், "இதை 21 ஆம் நூற்றாண்டு என்று என்னால் நம்ப முடியவில்லை. இது பொம்மை மட்டுமல்ல, பலருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல். இது அதிக பிரசிங்கித்தனம்." என்று கண்டித்து உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+