பாஜகவில் இருந்து விலகி..காங்கிரஸ் கட்சிக்கு வந்ததற்கு இதுதான் காரணம்.. போட்டு உடைத்த ஜெகதீஷ் ஷெட்டர்
பெங்களூர்: கர்நாடக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தது ஏன்? என்று தற்போது ஜெகதீஷ் ஷெட்டர் விளக்கம் அளித்துள்ளார்.
224-சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே 10 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

கர்நாடகாவை பொறுத்தவரை அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் ஒரே தென்மாநிலம் கர்நாடகம்தான். எனவே இங்கு ஆட்சியை இழந்து விடக்கூடாது என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது.
வேட்பாளர் தேர்தலில் மிகுந்த கவனம் செலுத்தி பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. பல சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. கர்நாடக பாஜகவின் முக்கிய தலைவர்களான ஈஸ்வரப்பாவுக்கு கூட தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதேபோல், முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கும் போட்டியிட சீட் கொடுக்கப்படாது என்று பாஜக மேலிடம் திட்டவட்டமாக கூறியது.
இதனால், கடும் அதிருப்தி அடைந்த ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அடுத்த நாளே காங்கிரஸ் கட்சியில் ஜெகதீஷ் ஷெட்டர் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த கையோடு, அவருக்கு காங்கிரஸ் சார்பில் உப்பள்ளி-தார்வாட் (சென்ட்ரல்) தொகுதியில் போட்டியிட சீட் வழங்கப்பட்டது. ஜெகதீஷ் ஷெட்டர் இந்த தொகுதியில் கடந்த 2008, 2013, 2018 சட்டசபை தொகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

இதன் காரணமாக பாஜகவிற்கு கடும் சவாலை ஜெகதீஷ் ஷெட்டர் அளிப்பார் எனத்தெரிகிறது. எனினும், ஜெகதீஷ் ஷெட்டரை வீழ்த்த வேண்டும் என்று ஒருபக்கம் பாஜக தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது. இதனால், உப்பள்ளி-தார்வாட் (சென்ட்ரல்) கூடுதல் பரபரப்பு நிலவுகிறது. இந்த நிலையில், பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தது ஏன்? என்று ஜெகதீஷ் ஷெட்டர் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெகதீஷ் ஷெட்டர் கூறியதாவது:- பொதுமக்கள் என்னை நம்பினார்கள். ஹுப்பளி தொகுதி மக்களும் என்னை நம்பினார்கள். எனது சுயமரியாதை பாதிக்கப்பட்டது. இது சவாலானதாக இருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு மாறியதும் எனது தொகுதியில் பல இடங்களுக்கு நேற்று நான் சென்றேன். அங்கு எனக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. கர்நாடகாவில் ஆட்சியை பாஜக நிறைவு செய்துள்ளது.
மூத்த தலைவர்களை மோசமாக நடத்துவதை பற்றியே மக்கள் அதிகம் பேசுகிறார்கள். வளர்ச்சி குறித்த பிற விஷயங்கள் பற்றி பேசவில்லை. முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு உள்ளதா? மூத்த தலைவர்களை அலட்சியம் செய்ததால், இந்த விவாதம் தற்போது எழுந்துள்ளது. சுய நலம் மிக்க சிலர் கர்நாடகாவில் ஒட்டு மொத்த பாஜகவையும் அரசையும் தங்கள் கட்டுக்குள் வைத்துள்ளனர்" என்றார்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications