மறைய தொடங்கிய சூரியன்.. உயிர்த்தெழுமா சந்திரயான் 3 லேண்டரும், ரோவரும்? இன்றே கடைசி நாள்
பெங்களூர்: நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. இந்நிலையில் இன்றுடன் நிலவில் சூரியன் அஸ்தமனமாகும் நாட்கள் தொடங்குவதால் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் மீண்டும் உயிர்த்தெழுமா? என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தில் உள்ள பள்ளத்தாக்குகளில் பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாமல் இருக்கிறது. இந்நிலையில் இங்கு நீர் இருப்பதற்கான சாத்தியங்களை சந்திரயான்-1 விண்கலம் கண்டுபிடித்து சொன்னது. 312 நாட்களாக நிலவை 3,400 சுற்றுகளை சுற்றிய பின்னர்தான் இதை சந்திரயான் 1 உறுதி செய்தது. அதன் பின்னர் நிலவை யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி தொடங்கியது. இதனையடுத்து நிலவில் ரோவரை இறக்கி அதில் அதன் மூலம் ஆய்வு செய்ய கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்தியது இஸ்ரோ.

ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப தவறால் நிலவில் தரையிறங்க இருந்த ரோவர் கட்டுப்பாட்டை இழந்து நிலவில் வேகமாக மோதி உடைந்தது. இருப்பினும் இதனை கொண்டு சென்ற ஆர்பிட்டர் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மற்றொரு ரோவரை அனுப்புவது என்று முடிவெடுத்து சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ம் தேதியன்று மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
திட்டமிட்டபடி தனது வேலையை முடித்துக்கொண்ட பிரக்யான் ரோவர், தற்போது உறக்க நிலையில் இருக்கிறது. நிலவில் தற்போது பகல் பொழுது 95 சதவிகிதம் முடிந்துள்ள நிலையில் இதுவரை லேண்டரையும், ரோவரையும் எழுப்ப மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இன்றுடன் நிலவில் சூரியன் அஸ்தமனமாகும் நாட்கள் தொடங்குகின்றன. எனவே இன்று லேண்டரரையும், ரோவரையும் எழுப்ப முடியாவிட்டால் அதை நிரந்தரமாக எழுப்ப முடியாமல் போகும் நிலை உருவாகும். எனவே இது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், "சந்திரயான் 3 திட்டத்தின் நோக்கம் என்பது சரியான இடத்தில் தரையிறங்குவதுதான். நமக்கு முன்னர் விண்கலனை ஏவிய ரஷ்யாவும், பின்னர் விண்கலனை அனுப்பிய ஜப்பானுக்கும் இதுதான் நோக்கம்.
இதற்கு முன்னரும் பல நாடுகள் நிலவில் விண்கலத்தை தரையிறக்கியுள்ளன. ஆனால், அப்போது பின்பற்றப்பட்ட தொழில்நுட்பம் வேறு. இப்போது செயல்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம் வேறு. பிற்காலங்களில் நிலவில் குடியிருப்புகள் உருவானால் அங்கு பொருட்களை கொண்டு செல்ல சரியான தொழில்நுட்பம் அவசியம். அதைதான் இஸ்ரோ முயன்று பார்த்திருக்கிறது. இந்த முயற்சி 100 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. அதற்கு நாம் நடத்திய ஆய்வுகள், அதில் கிடைத்த தகவல்கள் எல்லாம் போனஸ்தான். அந்த வகையில் லேண்டரையும், ரோவரையும் எழுப்ப முடியாவிட்டால் கூட சந்திரயான் 3 திட்டம் வெற்றிதான்" என்று கூறியுள்ளனர்.
அதேபோல இதை எழுப்புவதில் உள்ள சிக்கல்களை பற்றி கூறிய அவர்கள், "நிலவில் பகல் பொழுதுக்கும் இரவு பொழுதுக்கும் இடையே இருக்கும் வெப்ப வேறுபாடு ஏறத்தாழ 200 டிகிரி செல்சியஸ். சீனா போன்ற நாடுகள் அனுப்பிய விண்கலத்தில் இயற்கை கதிரியக்க மின்கலம் (பேட்டரி) பயன்படுத்தப்படுகிறது. எனவேதான் அது ஓராண்டு வரை செயல்படுகிறது. ஆனால் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரில் இதை நாம் பொருத்தி அனுப்பவில்லை. எனவே இவை இரண்டையும் மீண்டும் உயிர்ப்பிப்பது சவாலான பணி" என்று கூறியுள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications