பட்ஜெட் 2018: சலுகை மழையா? வழக்கம் போல அருண்ஜெட்லி அல்வாதானா?
டெல்லி: 2018 - 19 பட்ஜெட்டில் நடுத்தர பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரி விலக்கு உச்சவரம்பு 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும் என்று சம்பளதாரர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில் அது நடக்க வாய்ப்பே இல்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி 29ஆம் தேதியன்று பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்குக் காரணம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தல்தான்.
2018-2019ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி பிப்ரவரி 1ஆம் தேதி லோக்சபாவில் தாக்கல் செய்ய உள்ளார். அப்போது நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

2018 - 19
2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால் இதனை மனதில் வைத்து பல சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவே பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வருமான வரி உச்சவரம்பு வருவாய் ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சமாக உள்ளது. இதுபோல் பிபிஎப் அல்லது 5 ஆண்டு அல்லது அதற்கு மேலான வங்கி டெபாசிட்கள் ஆகியவற்றுக்கு, வருமான வரி சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரிச்சலுகை அளிக்கப்படுகிறது. உடல்நல காப்பீட்டுக்கு ரூ. 25,000 வரை சலுகை பெறலாம்.

வருமானவரி
2018 -19 பட்ஜெட்டில் வருமானவரி விலக்கு உச்சவரம்பு தற்போதுள்ள 2.55 லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சமாக உயர்த்தப்பட உள்ளதாக தெரிகிறது. ஆனால் ரூ.5 லட்சம் வரை எதிர்பார்க்கத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். அதே நேரத்தில் உச்சவரம்பு 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்.

30 சதவிகித வரி
5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வருமானம் உடையவர்களுக்கு 10 சதவிகிதம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 10 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவிகித வரியும், 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் இருந்தால் 30 சதவிகித வரியும் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நிதியமைச்ச வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அருண் ஜெட்லி அல்வா
கடந்த 2017 -18 பொது பட்ஜெட்டில் வருமான வரி வரம்பில் நிதியமைச்சர் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் தனிநபர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை இருந்தால் அதற்கான 10 சதவீத வரியை 5 சதவீதமாகக் குறைத்திருந்தார். இந்த ஆண்டு லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு பல சலுகை மழை பொழிய வாய்ப்பு உள்ளது என்றே எதிர்பார்க்கலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications