என்ன சொல்கிறது பொருளாதார ஆய்வறிக்கை... புல்லட் பாய்ன்ட்ஸ்!
இந்தியப் பொருளாதார தலைமை ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியன், இந்த ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்துவிட்டு மீடியாவைச் சந்தித்தபோது இப்படிச் சொன்னார்:

"இந்த ஆய்வறிக்கை ரொம்ப நீளமானது. கேட்டு முடிக்க எக்கச்சக்க பொறுமை. உங்கள் தலை தொங்க ஆரம்பிக்குமுன் நிறுத்திவிடவே விரும்புகிறேன்.."
எனவே விலாவாரியாக கொடுக்க ஆரம்பித்தால் போரடிக்கும். எனவே பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள், புல்லட் பாயின்டுகளாக...
* பண ஒழிப்பு, எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச சந்தையில் நிலவும் இறுக்கமான சூழல் போன்றவை இந்திய வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக உள்ளன.
* இரண்டு பெரிய காரணிகள் நம் பொருளாதாரத்தை பாதித்துள்ளன. ஒன்று பண ஒழிப்பு... இன்னொன்று அமெரிக்க அதிபர் தேர்தல்.
* நாட்டின் தொழில் வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதத்திலிருந்து 5.3 சதவீதமாகக் குறையும்
* இந்தியாவின் மொத்த உற்பத்தி - வர்த்தக (Commodity and Services) விகிதம் சீனாவை மிஞ்சிவிட்டது
* பண ஒழிப்பால் குறுகிய காலத்தில் பெரிய அளவில் பலன் இல்லை. நீண்ட காலத்தில் நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
* பண ஒழிப்பின் பாதிப்பு பிப்ரவரி மாதத்திலேயே நீங்கிவிடும் என்பது தவறு. ஏப்ரல் 2017-ல் ஓரளவு நீங்கும்.. டிசம்பரில்தான் சகஜமாகும்.
* பண ஒழிப்பு காரணமாக பெரிய நிறுவனங்கள் மற்றும் குடும்பங்களின் வாங்கும் திறனில் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. தங்களின் நிகழ்கால கொள்முதல்களை அவர்கள் தள்ளிப் போட்டுள்ளனர்.
* நாட்டின் மொத்த உற்பத்தியில் 0.75 சதவீத பாதிப்பு ஏற்பட்டாலும், உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் நம்முடையதுதான்.
* நாட்டின் 8 முக்கிய நகரங்களில் வீழ்ச்சியடைந்துள்ள ரியல் எஸ்டேட் தொழில் மேலும் வீழ்ச்சியடையும்.
* பெட்ரோலியப் பொருட்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக மானியங்களைக் குறைத்துள்ளது அரசு. அது தொடர வேண்டும்.
* இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை இந்த ஆண்டும் தொடர்கிறது. 2013-14-ல் 4.5 சதவீதமாக இருந்த இந்த பற்றாக்குறை, 2016-17-ல் 3.5 சதவீதமாக உள்ளது.
* உணவுப் பொருள்கள், தானியங்களின் விலைதான் உணவுப் பணவீக்கத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது.
*2016 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை மொத்த விலைக குறியீட்டெண் பணவீக்கம் 2.9 சதவீதமாக உள்ளது.
* 2016- 17 சேவைத் துறை வளர்ச்சி 8.9 சதவீதமாக இருக்கும்.
* 2016-17 வேளாண்மைத் துறையில் 4.2 சதவீத வளர்ச்சி இருக்கும். கடந்த 2015-16-ல் இது வெறும் 1.2 சதவீதமாக இருந்தது.
* 2018-ல் வட்டி வீதம் குறைக்கப்பட்டால், அது பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் தருவதாக இருக்கும்.
* நிலங்கள், ரியல் எஸ்டேட் போன்றவற்றை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும்.
* அந்நிய நேரடி முதலீட்டில் 29 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2016-17-ல் $ 21.3 பில்லியன் முதலீடு கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications