2018 அரையாண்டு நேரடி வரி வசூல் ரூ. 5.47 லட்சம் கோடி
2018 செப்டம்பர் வரையிலான நேரடி வரிவசூல் மொத்தம் ரூ. 5.47 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் மொத்த வசூலைவிட 16.7 சதவிகிதம் அதிகமாகும்.
டெல்லி: நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் மொத்த நேரடி வரி வசூல் 16.7 சதவீதம் உயர்ந்து 5.47 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் நிதி பற்றாகுறை அதிகரித்து வரும் நிலையில், மொத்த நேரடி நிதி வசூல் கடந்தாண்டை விட 16.7 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் சுமார் 1.03 லட்சம் கோடி ரூபாய் திருப்பி செலுத்தப்பட வேண்டிய நிதி எனவும், இது போக நிகர வரியின் மதிப்பு, 4.44 லட்சம் கோடி ரூபாயாக இருப்பதாகவும் மத்திய அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் 11.50 லட்சம் கோடி ரூபாயை நேரடி வரியாக வசூலிக்க நிதியறிக்கையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் முடிவடைந்த 2018-19 நிதியாண்டின் முதல் அரையாண்டில் வசூல் செய்யப்பட்டுள்ள நிகர வரி இந்த இலக்கில் 38.6 சதவிகிதத்தை எட்டியுள்ளது.
கடந்த 2017-18 நிதியாண்டில், 9.80 லட்சம் கோடி ரூபாய் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதைக்காட்டிலும் நடப்பாண்டிற்கான இலக்கு 14.7 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்கூட்டியே செலுத்தப்படும் வரியாக ரூ. 2.10 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதேகாலத்தைவிட 18.7 சதவிகிதம் அதிகமாகும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications