ஜிஎஸ்டி வரிச்சலுகையால் மத்திய அரசுக்கு எத்தனை கோடி இழப்பு தெரியுமா?
ஜிஎஸ்டியில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வரிச் சலுகையால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.5,200 கோடி வரையில் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி: சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் ஜிஎஸ்டி வரி விலக்கு வரம்பு ரூ.40 லட்சமாக உயர்த்தப்பட்டது. ஜிஎஸ்டி வரி விலக்கு வரம்பு ரூ.10 லட்சமாக உள்ள வடகிழக்கு மாநிலங்களில் ரூ.20 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்துள்ள புதிய சலுகையினால் லட்சக்கனக்கான நிறுவனங்கள் பலன் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த வரிச்சலுகை அறிவிப்பால் ஆண்டுக்கு ரூ.5,200 கோடி வரையில் அரசுக்கு இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லியில் ஜனவரி 10ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் ஜிஎஸ்டி வரி விலக்கு வரம்பு ரூ.40 லட்சமாக உயர்த்தப்பட்டது. ஜிஎஸ்டி வரி விலக்கு வரம்பு ரூ.10 லட்சமாக உள்ள வடகிழக்கு மாநிலங்களில் ரூ.20 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது.

கடந்த ஆண்டு மார்ச் மாத புள்ளி விவரப்படி 87 லட்சம் பேர் ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 45 லட்சம் பேரின் ஆண்டு வர்த்தகம் 20 லட்சத்துக்கு கீழ் உள்ளது. 10 லட்சம் பேர் வர்த்தகம் 40 லட்சம் வரை உள்ளது. தற்போது ஜிஎஸ்டியில் சுமார் 1.2 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால், ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ளவர்களில் 60 சதவீதம் பேர் கணக்கு தாக்கல் செய்யவோ, வரி செலுத்தவோ தேவையில்லை. ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்துள்ள புதிய சலுகைகள் மூலம் குறைந்தபட்சம் 50 லட்சம் நிறுவனங்கள் பலன் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து சரக்கு மற்றும் சேவை வரி அமலில் உள்ளது. இதில் மாநிலங்கள் மற்றும் தொழில் துறையினர் கோரிக்கைக்கு ஏற்ப வரி விகிதங்கள் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. வரி விலக்குகளும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய ஜிஎஸ்டி குழு இதுகுறித்து முடிவு செய்கிறது. ஜிஎஸ்டி கவுன்சிலின் வரிச்சலுகை அறிவிப்பினால் ஆண்டுக்கு ரூ.5,200 கோடி வரையில் அரசுக்கு இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ரூ.3,000 கோடி கூடுதல் இழப்பு அரசுக்கு ஏற்படும் தகவல் வெளியாகியுள்ளது.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications