ஜி.எஸ்.டி வரி : தாமதமாக தாக்கல் செய்தால் அபராதம் இல்லை! ஆனால் வட்டி உண்டு
ஜூலை மாதத்துக்கான ஜி.எஸ்.டி வரி ரிட்டன்களைத் தாமதமாகத் தாக்கல் செய்பவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: ஜி.எஸ்.டியின் முதல் ரிட்டன்கள் செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். இரண்டாவது ரிட்டன்கள் 10ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பான ஜிஎஸ்டி கடந்த ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் வர்த்தகர்களும் தொழில்துறையினரும் கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல ஜிஎஸ்டிஎன் அமல்படுத்தப்பட்ட புதிதில் சற்று குழப்பமாக இருந்தாலும், அனைவரும் விரைவில் புரிந்துகொண்டு தங்களின் வர்த்தக நடவடிக்கைகளை அதற்கேற்ப மாற்றிக்கொண்டனர்.
அதுபோலவே, மத்திய அரசும் வர்த்தகர்களின் சிரமங்களை புரிந்துகொண்டு அவர்களை ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்திற்கான கொள்முதல், விற்பனை, உள்ளீட்டு வரிப்பயன்பாடு(Input Tax Credit) மற்றும் நிகர வரி போன்றவற்றை ஜிஎஸ்டிஎன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு செப்டம்பர் 20ம் தேதிவரை கால அவகாசம் அளித்துள்ளது.

ஜூலை மாத வரி
ஜூலை மாதத்திற்கான செலுத்தவேண்டிய நிகர வரியை (Net Tax Liability) ஜிஎஸ்டிஆர்-3பி என்னும் புதிய படிவத்தின் மூலமாக ஜிஎஸ்டிஎன் இணையதளத்தில் செலுத்துவதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 25ஆம் தேதி ஆகும். ஆன்லைன் மூலம் வரி செலுத்தப்பட்ட பிறகுதான் ஜிஎஸ்டி வரி செலுத்தும் வேலை நிறைவடைகிறது.

ரூ.92000 கோடி வசூல்
இதனை பயன்படுத்தி பெரும்பாலான வர்த்தகர்களும் தொழில்துறையினரும் தங்களின் ஜூலை மாதத்திற்கான வரியை செலுத்தத் தொடங்கினர். இது வரையிலும் சுமார் 92000 கோடி ரூபாய் வரை வசூலானதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி

வரி செலுத்திய தொழில் துறையினர்
இந்த வரி வசூலானது ஜிஎஸ்டிஎன்னில் பதிவு செய்த மொத்த வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறையினரில் சுமார் 64.42 சதவிகிதமாகும். இதுவரையிலும் சுமார் 59.57 லட்சம் தொழில்துறையினரும் வர்த்தகர்களும் ஜிஎஸ்டிஎன்னில் பதிவு செய்துள்ளனர். அவர்களில் சுமார் 38.38 லட்சம் தொழில்துறையினரும் வர்த்தகர்களும் ஜூலை மாதத்திற்கான வரியாக சுமார் 64.42 சதவிகிமான 92,283 கோடி ரூபாயை செலுத்தி உள்ளனர்.

அபராதம் தள்ளுபடி
ஜூலை மாதத்துக்கான வரி ரிட்டன்களை தாமதமாகத் தாக்கல் செய்வோருக்கான அபராதத் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், தாமதமாக செலுத்தப்படும் வரிக்கான வட்டியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல்
ஜிஎஸ்டியின் முதல் ரிட்டன்கள் செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். இரண்டாவது ரிட்டன்கள் 10ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். மூன்றாவது ரிட்டன்கள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

அபராதம் இல்லை... வட்டி உண்டு
ஜிஎஸ்டிஆர்-3பி ரிட்டன்களில் பிழை செய்தவர்கள், ஜிஎஸ்டிஆர் -1, ஜிஎஸ்டிஆர் -2, ஜிஎஸ்டிஆர் -3, ஆகிய ரிட்டன்களில் சரியான தகவல்களை அளிக்க முடியும். எனினும், ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் வரி குறித்த தகவல்களை அளிக்காதவர்களுக்கு வட்டி வசூலிக்கப்படும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications