நவம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.97,637 கோடி - அக்டோபரை விட குறைவுதான்
நவம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி ரூ.97,637 கோடி வசூலாகியுள்ளது. இது முந்தைய மாதத்தை விட வசூலில் குறைவாகும்.
டெல்லி: நடப்பு நிதியாண்டில் நவம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் ரூபாய் 97 ஆயிரத்து 637 கோடியாக குறைந்துள்ளதாக, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அக்டோபர் முதல் நவம்பர் 30ஆம் தேதி வரையில் 69.6 லட்சம் பேர் ஜிஎஸ்டி 3ஆர் ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர்.

ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் மாநில அரசுகளுக்கு ரூ.11,922 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.97,637 கோடியாகக் குறைந்துள்ளது. முந்தைய மாதத்தில் ரூ.1,00,710 கோடி வசூல் செய்யப்பட்டிருந்தது.நவம்பர் மாதத்தைப் பொறுத்தவரையில் ரூ.23,070 கோடி மாநில ஜிஎஸ்டியாகவும், ரூ.16,812 கோடி மத்திய ஜிஎஸ்டியாகவும், ரூ.49,726 கோடி ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாகவும் வசூல் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வசூல் இந்த ஆண்டு ஏப்ரலில் ரூ.1.03 லட்சம் கோடியாகவும், மே மாதத்தில் ரூ.94,016 கோடியாகவும், ஜூனில் ரூ.95,610 கோடியாகவும், ஜூலையில் ரூ.96,483 கோடியாகவும், ஆகஸ்ட்டில் ரூ.93,960 கோடியாகவும், செப்டம்பரில் ரூ.94,442 கோடியாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிஎஸ்டி செலுத்த ஜனவரி வரை காலக்கெடு
இதனிடையே கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்று தமிழகத்தின் நாகை, கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர், சிவகங்கை, திருச்சி, கரூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களுக்கும் ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்காக காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதே போல திதிலி புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்திற்கும் ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்காக காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மத்திய நிதி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஜிஎஸ்டி வரி செலுத்துவோர், அக்டோபர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரியை டிசம்பர் 20ஆம் தேதிக்குள் செலுத்தலாம் என்றும், அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான வரி செலுத்துவோர் வரியை 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் செலுத்தலாம் என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications